கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதிக்கான விசேட வர்த்தமானியை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கடந்த 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதியாளர் ஒருவருக்கு அதிகபட்சம் 52 மெற்றிக் டன் அரிசியே இறக்குமதி செய்ய முடியும்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 2025-10-15 முதல் 2025-11-15 வரை பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்யப்படவுள்ளது.
சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.