புன்னைச்சோலையில் நிவாரணம் வழங்கவும் கிராம உத்தியோகத்தரை இடமாற்றவும் கோரிப் போராட்டம்!

மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணமோ அல்லது நிதியுதவியோ வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இப்பேரணியானது மாமாங்கம் ஆலய வீதி, பார் வீதி, அரசடி சுற்றுவட்டம் மற்றும் நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து முற்றுகையிட்டது.

இவ்விடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். கிராம உத்தியோகத்தர் தொடர்பான புகார்கள் குறித்தும், நிவாரணம் தொடர்பாகவும் தீர்க்கமான விசாரணை செய்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு,

“தாம் பாதிக்கப்பட்டபோது கிராம உத்தியோகத்தர் தங்களைப் பார்வையிடவில்லை எனவும், அதனால் வெள்ள நிவாரணம் மற்றும் அரசாங்கக் கொடுப்பனவுகள் தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் முறையிட்டனர். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம். நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்தும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.

மேலும், கிராம உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது செயல்பாடு தவறாக இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். கடந்த காலத்தில் மக்களின் நிதியை வீணடித்தவர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகத்தான் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவும் முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவும் இயலாவிடின் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.

rupe

இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கல்

December 16, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக

Deatg

நீர்வேலியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

December 16, 2025

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த

war

சிவப்பு எச்சரிக்கை நீக்கம்; மஞ்சள் எச்சரிக்கை நீடிப்பு

December 16, 2025

முன்னர் வழங்கப்பட்ட நிலை 3 (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டன, அதே நேரத்தில் அதிகாரிகள் தற்போதைய நில நிலை மற்றும்

mod

பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

December 16, 2025

தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார். தமிழகத்தில் ஜன., 15ல் பொங்கல் பண்டிகை

th

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை மீறுகின்றது!

December 16, 2025

‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு

kash

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

December 16, 2025

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள

sou

‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

December 16, 2025

ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது.

jana

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

December 16, 2025

. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற

as

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

December 16, 2025

தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

arun

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’

December 16, 2025

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’

kombu see

‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீடு

December 16, 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் மற்றும் எதிர் காலத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக ஜொலிக்க போகும்

ipll

ஐ.பி.எல் 2026 ஏலம்: 25.2 கோடிக்கு ஏலம் போன கிறீன்

December 16, 2025

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான கமரன் கிறீன் 25.2