புகையிரத சேவையில் நெருக்கடி; சரியான அதிகாரியைத் துரிதமாக நியமியுங்கள்!

அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் புகையிரத சேவையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம். மலையக புகையிரத சேவையை மீள ஆரம்பிப்பதற்கு புனரமைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர வலியுறுத்தியுள்ளார்.

புகையிரத நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தித்வா புயல் தாக்கத்தால் ஏனைய அரச திணைக்களங்களை காட்டிலும் புகையிரதத் திணைக்களம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பாரியதொரு பங்களிப்பு வழங்கும் மலையக புகையிரத பாதை மிக மோசமாக சேதமடைந்துள்ளது.பிரதான புகையிரத பாதையில் றம்புக்கனை புகையிரத நிலையத்துக்கு அப்பால் புகையிரத சேவை முன்னெடுக்கப்படாத காரணத்தால் பொதுப்பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

இதனால் புகையிரதத்துக்கு ஒரு மாதத்துக்கு செலவழித்த பணத்தை, பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ஓரிரு நாட்களுக்கு செலவழிக்க வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.இதனால் பொதுபயணிகள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சேதமடைந்த பேராதனை புகையிரத பாலத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்தில் இரட்டை பாலத்தை நிர்மானிப்பதற்கு யோசனை முன்வைத்திருந்தாலும்,பின்னர் பழைய பாலத்தை புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இவ்வாறான நிலையில் கண்டிக்கான புகையிரத சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது. இருப்பினும் தொழில்நுட்ப நெருக்கடிகள், சீரற்ற காலநிலை ஆகிய காரணிகளால் பேராதனை புகையிரத பாலம் நிர்மாணிப்பு பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே இந்த பாலத்தை புனரமைப்பது தொடர்பில் மீண்டும் ஒரு அறிக்கையை புகையிரத திணைக்களம் உரிய தரப்பினர்களிடம் கோரியுள்ளது.

றம்புக்களை முதல் கடுவன்னாவ வரையினால புகையிரத பாதத்தை புனரமைப்பதற்கு இதுவரையில் எவ்வித திட்டங்களும் தயாரிக்கப்படவில்லை.புகையிரத வீதி பராமரிப்பு, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவது உள்ளிட்ட சகல பணிகளும் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.புகையிரத போக்குவரத்து சேவையை குறைத்துவிட்டு புகையிரத திணைக்களம் இலாபமடைகிறது என்று பொதுமுகாமையாளர் குறிப்பிடுகிறார்.சக அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறாமல் இவர் தன்னிச்சையாக செயற்படுவதால் அரசாங்கமும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன், பொதுபயணிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

அரச நிர்வாக சேவையின் அதிகாரி ஒருவரை புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளராக நியமித்துள்ளதால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.தித்வா புயல் தாக்கத்தால் மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை விரைவாக புனரமைத்து, புகையிரத சேவையை வினைத்திறனாக்குவதற்கு பொதுமுகாமையாளர் பதவியில் சேவையாற்றி ஓய்வுப்பெற்ற பொறியியலாளர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்குமாறு வலியுறுத்துகிறோம்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.