பிரித்தானியாவில் தைப்பொங்கல் விழா

பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை (16 ஜனவரி 2026) இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் ஸ்டீவ் ரீட் மற்றும் பிரித்தானியாவின் முதல் தமிழ் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்றதற்குப் பின்னர், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரித்தானிய தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மட்டுமின்றி, கலை மற்றும் பொழுதுபோக்கு, கல்வி, பொது சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னோடிகளும் கலந்து கொண்டனர்.

இது, பிரித்தானியாவில் தமிழ்ச் சமூகத்தால் வழங்கப்பட்ட நீண்ட கால மற்றும் பல்வேறு துறை சார்ந்த பங்களிப்புகளை பிரதிபலிப்பதாக அமைந்தது.

இதுகுறித்து, வீடமைப்பு, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் தெரிவித்ததாவது, “வன்முறைகளும் கொடூரமான உள்நாட்டுப் போரும் காரணமாக பல தமிழர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் பெற்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினர்.

ஆனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, இன்று நாம் காணும் பிரித்தானியாவையும் கட்டியெழுப்ப உதவியுள்ளீர்கள். இன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் நிற்கும் போது, கலை, கலாசாரம், அறிவியல், வணிகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் பிரித்தானிய தமிழ் சமூகத்தின் திறமைகள் எவ்வளவு விரிவாக உள்ளன என்பதை பார்க்க முடிகிறது.

பிரித்தானிய அரசின் சார்பில், நீங்கள் செய்ததும், செய்து கொண்டிருப்பதும், எதிர்காலத்திலும் செய்ய உள்ள பணிகளுக்கும் நன்றி தெரிவித்து, உங்கள் சமூகத்தையும் எங்கள் நாட்டையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன்.

இந்த தொழிற்கட்சி அரசாங்கம் எப்போதும் உங்களுடன் நிற்கும். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்ததாவது: “பிரித்தானிய தமிழ் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் மன உறுதியையும் பிரதிபலிக்கிறது.

என் பெற்றோர் தங்கள் பிறந்த நாட்டில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவதற்காக,பிரித்தானியாவில் கடுமையாக உழைத்து என் எதிர்காலத்தை உருவாக்கினர். இது லண்டன், பிரித்தானியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் பல தமிழர்களின் கதையாக உள்ளது.

தமிழ் பாரம்பரிய மாதத்தை கௌரவிக்கும் வகையில், அடுத்த தலைமுறை தமிழ் மாற்றத்தை உருவாக்கும் இளைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்களுக்காக பிரதமர் டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ஐ திறந்துவைத்துள்ளதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

தைப்பொங்கல் என்பது அறுவடைத் திருவிழாவாகிய எங்கள் பழமையான கலாசார மரபுகளின் கொண்டாட்டம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழ்ச் சொல்லாடல், புதிய நம்பிக்கை, புத்துணர்வு மற்றும் மாற்றத்திற்கான ஆவலை குறிக்கிறது.

அதையே இந்த தொழிற்கட்சி அரசாங்கம் இன்றைய தினம் கொண்டாடுகிறது. இதே உத்வேகத்துடன் தான் நாம் புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம்” என குறிப்பிட்டார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.