பிரதமர் மோடி மீது அதிருப்தி!

இந்தியா – அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார்.

இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடா்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் கூட்டறிக்கை கடந்த பிப்.7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில், வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அரசு சமரசம் செய்திருப்பதாக கபில் சிபல் விமர்சித்தார். அவர் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமரிடம் ஒன்றைக் கேட்க வேண்டும், கடந்த 11 ஆண்டுகளில் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறீர்கள்? புதிதாக கட்டடங்களை எழுப்புதல் நல்ல விஷயம்தான். சத்தியமேவ ஜெயதே முழக்கத்தையும் நாம் கேட்கிறோம்.. ஆனால், ‘அசத்தியமே..’ கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது.

“‘ஆத்மநிர்பார் (தற்சார்பு)’ என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்வதைக் கேட்டு வருகிறோம், இப்போது அது, ‘டிரம்ப் பே நிர்பார் (டிரம்ப் சார்பு)’ என்றாகிவிட்டதுபோலும்… தேர்தல்களில் எப்படி வெற்றி பெறுவதென்பதை அறிந்து வைத்துள்ள பாஜகவுக்கு, எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியவில்லையே..!”.

அமெரிக்க செயல் ஆணைகள் 14066, 14329 ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய கபில் சிபல் குறிப்பிடும்போது, “இந்தியா ரஷிய எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொள்முதல் செய்தால், அமெரிக்காவால் மீண்டும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். டிரம்ப் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போது, ‘அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஒத்துப்போகும் வகையில் இணங்கிச் செயல்பட இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக்’ குறிப்பிட்டார்.

இந்த அரசிடம் நான் ஒன்றைக் கேட்க வேண்டும், ‘எதற்காக இதற்கு ஒத்துக்கொண்டீர்கள்?’ வரலாற்றில் இப்படி ஒருபோதும் நிகழ்ந்ததேயில்லை! ‘நமது வெளியுறவுக் கொள்கை, பிற நாட்டின் கொள்கையுடன் ஒத்துச் செயல்படும்’ என்பதை நமது பிரதமரும் அரசும் ஒத்துக்கொண்டுள்ளது” என்றார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் (500 பில்லியன்) அமெரிக்க பொருள்களையும் அந்நாட்டுச் சேவைகளையும் வாங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளதைக் கடுமையாக விமர்சித்த கபில் சிபல், நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பிரதமர் விவாதிக்கவும் வலியுறுத்திக் கேட்டுகொண்டார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் விமர்சனங்களை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய