ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி மட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டார்.