பாதுகாப்புச் சட்டத்தை நிறுவ முயற்சி?

2022ஆம் ஆண்டின் 09ஆம் எண் கொண்ட தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமானது இலங்கையில் தனிப்பட்ட தரவுகளைச் செயன்முறைப்படுத்துவதனை ஒழுங்கு படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் தரவோடு தொடர்புபட்டோரது உரிமைகளை அடையாளம் காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்; தரவுப் பாதுகாப்பு அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கும் அவற்றோடு தொடர்புபட்ட கருமங்களுக்களை ஆற்றுவதற்கும் ஆன ஒரு சட்டமூலமாகும்.

இந்தச் சட்டமூலமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) மற்றும் சிங்கப்பூரின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் மாதிரியைப் பின்பற்றி இலங்கையில் ஒரு விரிவான தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுவ முயல்கின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், 2022ஆம் ஆண்டின் 09ஆம் எண் கொண்ட மேற்படி தரவுப் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் உள்ள நிர்வாகச் சுமைகளை குறைக்கும் நோக்கிலும்; பன்னாட்டுப் பொதுவான நடைமுறைகுக்கு நெருக்கமாக்கும் வகையிலும்; எண்மியப் பொருளாதார அமைச்சர் 2025ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இச் சட்டத்தின் பல முதன்மையான மாற்றங்களை முன்மொழிந்துள்ளார்.

01. காலக்கெடு 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட சட்டப் பிரிவு 17 இற்கு அமைய, தரவோடு தொடர்பு பட்டோரின் கோரிக்கைக்கு கட்டுப்பாட்டாளர் அல்லது செயன்முறைப் படுத்துநர் 21 வேலை நாட்களுக்குள் விடையளிக்க வேண்டும். இது ஒரு மாத காலத்துக்குள் விடையளிக்கலாம் என மாற்றப் பட்டுள்ளதோடு நியாயமான காரணங்களுக்காக மேலும் இரண்டு மாத காலம் என மொத்தமாக மூன்று மாதங்கள் வரை விடையளிக்க கால நீட்டிப்புக் கோரலாம் என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

02. கோரிக்கைக் கட்டணம் 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட சட்டப் பிரிவு 17 இற்கு அமைய, தரவுடன் தொடர்பு பட்டவரின் கோரிக்கைகளுக்கு விதிமுறைகளின் படி கட்டணம் அறவிடப் படலாம் என குறிப்பிடப் பட்டிருந்தது. இது மாற்றப்பட்டுக் கோரிக்கை, கட்டணம் இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதோடு சில சூழ்நிலைகளில் மட்டும் கட்டணம் அறவிடத் தரவுப் பாதுகாப்பு அதிகார சபை விதிகளை உருவாக்கலாம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

03. தரவுப் பாதுகாப்பு அதிகாரி (DPO ) நியமனம் 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட சட்டப் பிரிவு 20 இற்கு அமைய, அமைச்சகங்கள், அரசாங்கத் திணைக்களங்கள் அல்லது அரச கூட்டுத் தாபனங்களுக்கு தரவுப் பாதுகாப்பு அலுவலர் (DPO) நியமனம் கட்டாயமாக்கப் பட்டிருந்தது. புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் அரச கூட்டுத் தாபனங்களுக்கு (PUBLIC CORPORATION ) தரவுப் பாதுகாப்பு அலுவலருக்கான (DPO) நியமனத் தேவை நீக்கப்பட்டுள்ளதோடு இனித் தரவுப் பாதுகாப்பு அலுவலரின் (DPO) பங்கு கட்டுப் பாட்டாளருக்கு மதியுரைத்தலாக இருக்கும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

04. தரவுப் பாதுகாப்புத் தாக்க மதிப்பீடு சமர்பிப்பு – DPIA ( பிரிவு 24) 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட சட்டப் பிரிவு 24 இற்கு அமைய, தரவுக் கட்டுப்பாட்டாளர், தரவுப் பாதுகாப்புத் தாக்க மதிப்பீட்டை தரவுப் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டாயம் முன்வைக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த ஒழுங்கு விதி தரவுப் பாதுகாப்பு அதிகார சபை எழுத்து மூலம் கோரினால் மட்டுமே முன்வைக்க வேண்டும் என மாற்றப் பட்டுள்ளது. தீங்கின் ஆபத்துக்களை தணிப்பதற்கான வழிமுறைகளும் முன்கலந்தாய்வுக்கான தேவைப்பாடும் ( பிரிவு 25) 2022 ஆம் ஆண்டின் 09 ஆம் எண் கொண்ட சட்டப் பிரிவு 25 இற்கு அமைய, தரவுடன் தொடர்பு பட்டோரின் உரிமைகளுக்குத் தீங்கு ஏற்படுத்தும் ஆபத்தொன்றை விளைவிக்கக் கூடும் என தரவுப் பாதுகாப்புத் தாக்க மதிப்பீடு ஒன்று சுட்டிக் காட்டும் இடத்து, கட்டுப்பாட்டாளர் தரவுப் பாதுகாப்பு அதிகார சபையிடம் முன் ஆலோசனை பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை