பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 வருடங்கள் விளக்கமறியலில் இருந்தவருக்கு பிணை – மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரொருவருக்கு பிணை வழங்கி மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி இவ்வாறு நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது, அவரை  பிணையில் விடுவிப்பதுக்கு போதுமான விசேட சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்து நீதிமன்றம் இதன்போது தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பிரதிவாதி பிணை மனுவைத் தாக்கல் செய்யும் போது சுமார் 15 வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் கைது செய்யப்படும் போது 26 வயதுடைய இளைஞனாக இருந்தாரெனவும், வழக்கு விசாரணையை எதிர்பார்த்து அவரது இளமைக் காலத்தின் மிக முக்கியமான பகுதி சிறையிலேயே கழிக்க நேரிட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளது.

நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த பயங்கரவாத வழக்கின் மூன்றாவது  பிரதிவாதியான  தம்பையா பிரகாஷ் அல்லது தனுஷ் என்பவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை இரத்து செய்தே மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பானது நீதிபதிகளான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோரடங்கிய நீதியரசர்கள்  அமர்வு  இந்த உத்தரவை  அறிவித்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட இந்த  பிரதிவாதிக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகள்  என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் சாட்சியாளர்களாக 106 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடுமையான நிபந்தனைகளின் கீழ்  பிரதிவாதிக்கு 200,000 ரூபா ரொக்கப் பிணை, தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகள் விதித்து பிணை வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டது.  மேலும் இரு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறும் மற்றும் பிரதிவாதியின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்  எனவும் பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்படி பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் நாடாளுமன்றத்தினால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் 15 பி  பிரிவு உள்ளடக்கப்பட்டு,  விசேட நிலைமைகளின் கீழ் பிணை வழங்குவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், மேல் நீதிமன்றம் பிணையை நிராகரித்த போது அந்தத் திருத்தத்தின் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக கருத்திற் கொள்ளவில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம்  இதன்போது அவதானித்துள்ளது.

பிரதிவாதி கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு வயது நிறம்பிய மகள்  இருந்ததாகவும் இந்த நீண்டகாலத் தடுப்புக்காவல் காரணமாக, அவரது குடும்பத்தினருக்கு அவரது அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாது போயுள்ளதாகவும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில்  பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி அருண மதுசங்கவுடன் சட்டத்தரணி அஸ்திக தேவேந்திர முன்னிலையாகியிருந்ததோடு, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அனூபா டி சில்வா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images (19)

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ்தெரிவு!

July 28, 2026

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகர சபையின் உப

5

மேகதாது விவகாரம்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!

July 28, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த அதிரடி

photo-collage.png (4)

செம்மணி மனித புதைகுழி பேரவலத்திற்கு யார் காரணமென்பது விசாரணைகளின் இறுதியிலேயே தெரிய வரும் – நீதி அமைச்சர்

July 28, 2026

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும்

s

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 28, 2026

இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள்

a35

கிளிநொச்சி மாவட்ட A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

July 28, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் A35 பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் 12 ஆவது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம்

1688202098-EARTHQUAKE-6

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

July 28, 2026

ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

Nali

நீதிபதிகளின் ஓய்வு; சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

July 28, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவை ஊடகப்

Crick

கிரிக்கெட்டின் புதிய அரசியலமைப்பு வரைவு கையளிப்பு!

July 28, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய அரசியலமைப்பின் வரைவு, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தெரிவித்துள்ளது. புதிய

cyb

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

July 28, 2026

துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய

exc

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு

July 28, 2026

மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப்

kapil-sibal-saurav-das-pti

நீட் போராட்ட மாணவர்களின் சட்ட உதவிக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்தார் கபில் சிபல்!

July 28, 2026

புதுடெல்லி: தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராட்டம் நடத்திவிட்டு,

MediaFile

எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

July 28, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட