நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வழக்கு ஒன்றுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க 2024.08.19 ஆம் திகதியன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டி தலதா பெரஹராவை நிறுத்துவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டதாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

இந்த போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக 2024.09.11 ஆம் திகதியன்று திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக பிரதமர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தான் குறிப்பிட்ட விடயத்தால் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றிருக்கமாட்டார் என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்;டார்.கண்டி தலதா மாளிகை பற்றி குறிப்பிட்ட கருத்துக்கும், தேர்தலில் பிரதமர் வெற்றிப்பெற்றதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

இந்த வழக்கில் நட்டஈடு செலுத்துவதற்கு திஸ்ஸ அத்தநாயக்க 100 மில்லியன் ரூபாவை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குறிப்பிட்ட பொய்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலளிக்க வேண்டியுள்ளது.

ஊழல் மோசடி உட்பட பல குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

பாதாளக் குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தமது உண்மைகள் வெளிவரும் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளார்கள். எதிர்க்கட்சியினரின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்றார்.

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்