நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக இன ரீதியான பாகுபாட்டுக்கு தீணி போடுபவர்களாகவே செயற்பட்டனர். இப்படியானவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகைகள் எதற்கு? எனவே, ஓய்வூதியம் தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன – அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் டி சில்வா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தனியார் ஊடகங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. ஊடக நிறுவனங்கள் மூடப்படுதல், ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் செலுத்தப்படாமைஈ முறையாக சம்பளம் வழங்கப்படாமை உள்ளிட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

ஆனால் தனியார் ஊடக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக இயங்குவதால் அவர்களின் சம்பளம் மற்றும் தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு தலையிடுவதற்கான அதிகாரங்கள் குறைவாகும். தொழில் சட்டத்தின் கீழ் அந்த விடயம் இருப்பதால் தொழில் திணைக்களத்தின் ஊடாகவே நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கான கௌரவம் வழங்கும் வகையில் அரச தகவல் திணைக்கள பணிப்பாளரால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற ரீதியில் அவர்களுக்கு முறையாக கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கமைய எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்காக பட்டய நிறுவனத்தை தொடர்பான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அது கூடிய விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஊடகவியலாளர்களை தொழில்சார் உரிமைகளுடன் கௌரவமாக பணியாற்றக்கூடிய வகையில் பொருத்தமான நிறுவனத்தை அமைக்கும் வகையில் இது அமையும்.

ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்,பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்துடன் அரச பங்களிப்புடன் சுகாதார காப்புறுதிகளை வழங்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இந்த வருடத்தில் அதனை செயற்படுத்துவதற்குள்ளோம். இதன்படி ஊடகவியலாளர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றார்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு