தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அரசாங்கம் செயற்படுகிறது – விமல் வீரவன்ச

தேர்தலுக்குச் செலவு செய்த புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா அண்மையில் ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காகப் பெயரிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பதினொரு தமிழர்களின் பெயர்களை அந்த வர்த்தமானி அறிவிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், அவர்கள் தடைசெய்யப்பட்ட நபர்களாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தனர். வர்த்தமானி அறிவிப்பிலிருந்து அந்த 11 பெயர்களையும் நீக்கி, அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தவர், ஜனாதிபதி அநுர குமாரவின் கீழ் உள்ள பாதுகாப்புச் செயலாளராவார் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

குறித்த நபர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுகளுக்கமையவே பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது, இவர்கள் பயங்கரவாதத்திற்குப் பணம் அனுப்பினர், பணச் சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு குழுவைத்தான் பாதுகாப்பு செயலாளர் அவற்றிலிருந்து விடுவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமாரவின் அனுமதியின்றி பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா இதைச் செய்திருக்க மாட்டார்.

குறித்த 11 பேருக்கு, பயங்கரவாதத்திற்குப் பணம் சேகரித்தல், பணச் சலவை போன்ற சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்தும், தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்படுகின்றன. அதாவது, அவர்கள் இப்போது இலங்கைக்குள் சுதந்திரமாக வந்து போகலாம். அவர்கள் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடலாம். தேவைப்பட்டால் பயங்கரவாதத்திற்கு மீண்டும் பணம் அனுப்பலாம்.

அந்தச் சுதந்திரத்தை அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குக் கொடுத்துவிட்டு, இங்கே பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் கேள்வியெழுப்பினால் இராணுவ வீரர்கள் பழிவாங்கப்படுகின்றனர் எனக் கூற வேண்டாமென ஜனாதிபதி எம்மை எச்சரிக்கின்றார்.

தேர்தலுக்குச் செலவு செய்த தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார். செல்லுபடியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட புலிகளைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கும் அரசாங்கம், இங்கு வந்து, கடற்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. இந்த தேசத்துரோக நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இப்போது அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை ஒரு பங்காளியாக ஆக்குகிறார்கள். மறுபுறம், புலிகளின் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளவர்களை நீக்குகிறார்கள். இன்னொரு புறம், பாதுகாப்புப் படையினர், கடற்படையினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சட்டத்தை அமுல்படுத்துவதாகக் கூறி அவர்களை பழிவாங்குகின்றனர் என்றார்.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்த பாதிப்புகளின் போது அந்த பாதிப்புகளை குறைப்பதுவே அரசாங்கத்தின் பொறுப்பாகும். பல வாரங்களுக்கு முன்னரே பாதிப்பு வரும் என்று

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்