தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த தாக்குதலில் சிக்கி 96 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (28) ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் அமைந்திருக்கும் இந்த பெண்கள் ஆரம்பப் பாடசாலையின் மீது சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின்போது 85 மாணவிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலைவரப்படி, இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாடசாலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் “காட்டுமிராண்டித்தனமான செயல்” என ஈரான் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.