திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 பேர் கைது

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 பேரை தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் தமிழ்நாட்டின் திருப்பூரில் கைது செய்தனர்.

கடந்தாண்டு நவ. 10 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப். 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்கு பழிவாங்க பயங்கரவாதக் குழு மேற்கொண்ட முயற்சிகளுடன் இந்தியாவில் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நாட்டில் பயங்கரவாத சதித் திட்டம் தொடர்புடையதாக வெளியான தகவலின் அடிப்படையில், சி.சி.டி.வி கண்காணிப்பு, வாகன சோதனைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கூடுதல் பணியாளர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லி பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து மிசானூர் ரஹ்மான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜால் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரும், மேற்கு வங்கத்தில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும் காவல் துறையினர் தகவல்கள் தெரிவித்தனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.