‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு அரசாங்கமே பொறுப்பு ; உயர் நீதிமன்றில் எதிர்க்கட்சிகள் வழக்கு

‘தித்வா’ சூறாவளி அனர்த்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கு முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனத்தில் கொள்ளத் தவறியதே காரணம் எனக் குற்றம் சாட்டி, ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் ‘வாழ்வுரிமையைப்’பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டது என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாக முன்வைக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி சுமார் 640க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த பாரிய அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்திருந்த முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் உரியவாறு கருத்தில் கொள்ளாது அசமந்தமாகச் செயல்பட்டதாலேயே இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என எதிர்க்கட்சிகள் ஆதாரபூர்வமாகக் குற்றம் சாட்டுகின்றன. மக்களின் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என்பதை உயர் நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தற்போதுள்ள சூழ்நிலை, 2019 ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் போது ஏற்பட்ட நிலைமையுடன் எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. அதாவது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், ஈஸ்டர் தினத்தன்று அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் மற்றும் உடமை இழந்தவர்களுக்கு நீதி கோரி, அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோன்றதொரு சூழ்நிலை தான் தற்போதும் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்தமையால் 640க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து ஈடுபட்டுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் அடங்கும்.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் சட்டத்தரணிகளுக்கிடையில் அவரது இல்லத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளும் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகளும் தனித்தனியே இந்த விடயம் குறித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்

ba

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து; இருவர் காயம்

December 16, 2025

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா

ce

பதிவு சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

December 16, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும்