தற்போதைய அரசாங்கம் இன்னும் எதிர்க்கட்சி மனநிலையிலேயே உள்ளது – நாமல் ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் லால் காந்த மகா சங்கத்தினரை அவமதித்தும், அரச அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை அச்சுறுத்தியும் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என நினைத்தால் அது வெறும் கனவாகவே முடியும் என்றார்.

கவண் (Catapult) மூலம் செய்ய வேண்டிய காரியங்களுக்கு பீரங்கிகளைப் பயன்படுத்தப்போவதில்லை என லால் காந்த கூறுவதைக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, பளிங்கு உருண்டைகளால் (Marbles) செய்ய வேண்டிய காரியங்களுக்குத் தாம் கவண்களைக் கூட பயன்படுத்தப்போவதில்லை எனப் பதிலடி கொடுத்தார்.

வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கமே தமக்கு எதிராகத் தாமே வீதியில் இறங்கிப் போராடும் விசித்திரமான நிலையை இன்று காணக்கூடியதாக உள்ளதாக அவர் விமர்சித்தார்.

கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் ஏனைய விடயங்களில் எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசாங்கம், தனது ஆதரவாளர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதானது, அவர்கள் இன்னும் தாம் எதிர்க்கட்சியில் இல்லை என்பதை உணராததையே காட்டுகிறது என்றார்.

அத்துடன், நாட்டில் அதிகரித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் பின்னணியில் அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும், போதைப்பொருள் மற்றும் பாரிய ஊழல்களைக் கண்டுபிடிக்கும் நேர்மையான அதிகாரிகளுக்குத் திட்டமிட்டு இடமாற்றங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், முறைகேடுகளைச் சுட்டிக்காட்டும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது கவலைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

அச்சுறுத்தல்கள் மூலமோ அல்லது சிறைச்சாலைகளைக் காட்டி பயமுறுத்துவதன் மூலமோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தைத் தடுத்துவிட முடியாது எனவும், கடந்த காலங்களில் விலகிச் சென்றவர்கள் இப்போது மீண்டும் கட்சியுடன் இணைந்து வருவதால் கட்சி முன்பை விடவும் பலமாக வளர்ந்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த