தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்கள் சேவைக்கு அவமானத்தை ஏற்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் பதவி விலக வேண்டும்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பதவியிலிருந்து விலக மக்கள் சேவை என்பதற்கு அவமானத்தை ஏற்படுத்திய செல்வம் அடைக்கலநாதனுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் வகையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் ‘போர்க் கொடி’ பிடித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு இணங்கியுள்ளார். எனவே

வவுனியாவில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின்தலைமைக் குழு கூட்டத்தில், செல்வம் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் பலர் கடுமையாக வலியுறுத்தினர். இதன்போதே தனது பதவியை ஜனவரி மாதம் பதவிவிலகுவதாக செல்வம் அடைக்கலநாதன் கால அவகாசம் கோரினார்.

தலைமைக்குழு கூட்டம் அன்றைய தினம் வவுனியா நெல்லி ஹொட்டலில் நடந்தது.கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்கி நடத்த முயன்ற போது, உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில், செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகார ஒலிப்பதிவு குற்றச்சாட்டு, எதிர்வரும் ஏப்ரலில் நடக்கவிருக்கும் கட்சியின் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடு குறித்து விவாதிப்பதாக இருந்தது. குற்றம்சாட்டப்பட்ட செல்வம் அடைக்கலநாதனே கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது என உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இதனையடுத்து உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.
தலைமைக்குழு உறுப்பினர்கள் நேரிலும், இணைய வழியிலுமான 18 பேர் கலந்து கொண்டனர்.
செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டை பல தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்வைத்து, காரசாரமான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் அடைக்கலநாதன் பிழையாக நடந்து கொண்டார் என்ற கருத்தே அனைத்து தலைமைக்குழு உறுப்பினர்களும் தெரிவித்தனர்.

செல்வம் அடைக்கலநாதன் மௌனமாக அதை கேட்டுக் கொண்டிருந்தார்.
உபதலைவர் ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சபா குகதாஸ், சிங்கன், வினோ நோகராதலிங்கம் போன்றவர்கள்- செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமைப்பதவிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தினர்.தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரலில் கட்சியின் தேசிய மாநாட்டில் தான் போட்டியிடவில்லையென்றும், அதில் விரும்பிய ஒருவரை தலைவராக தெரிவு செய்யுங்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எனினும், அவரை பதவிவிலக வலியுறுத்திய உறுப்பினர்கள் அதை ஏற்கவில்லை. உடனடியாக பதவிவிலக வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினர். இறுதியில், எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி தேசிய மாநாட்டை நடத்தி, புதிய தலைவரை தெரிவு செய்யுங்கள். அதில், கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராகவோ, மத்திய குழு உறுப்பினராகவோ நான் கலந்து கொள்ளமாட்டேன் என செல்வம் அடைக்கலநாதன் வாக்குறுதி வழங்கினார்.

ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார;, சபா குகதாஸ், சிங்கன், வினோ நோகராதலிங்கம் தவிர்ந்த ஏனையவர்கள்- செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கையை ஏற்கலாம் என்றும், அவரை ஜனவரி வரை தொடர அனுமதிக்கலாமென்றும் தெரிவித்தனர். ஐனவரி இன்றி டிசம்பரிலும் மாநாட்டை நடாத்த முடியும் என கருத்து கூறப்பட்டபோது அதற்கான நிதியீட்டலை உடனடியாகப் பெற முடியாது எனக் கூறப்பட்டது.

இதையடுத்து, எதிர்வரும் ஜனவரியில் நடக்கும் ரெலோவின் தேசிய மாநாடு வரை தலைமைப்பதவியில் செல்வம் அடைக்கலநாதன் தொடர்வதென தீர்மானமானது.
இதேவேளை, கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தலா 5 தலைமைக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

nin

நிந்தவூரில் கேரள கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!

November 18, 2025

கேரள கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை

pola

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

November 18, 2025

ஐரோப்பிய நாடான போலந்தில், இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போலந்திற்கான இலங்கைத் தூதர் பிரியங்கிகா தர்மசேன

jap

எரிமலை நெருப்பு பிழம்பு; ஜப்பானில் விமான சேவைகள் ரத்து

November 18, 2025

ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஜப்பான்

kanda

கண்டாவளையில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

November 18, 2025

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா

Dead_

சிலாபம் பாடசாலைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

November 18, 2025

சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என

pla

மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்

November 18, 2025

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தற்போது மன்னார் கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்கி வருகிறது. வடக்கு கரையோரம் சார்ந்த

1000925019

தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்!

November 18, 2025

இந்தியா தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபதி கோடி

karaichchi

புத்தர் சிலை விவகாரம்; கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம். குறித்த சம்பவம் தொடர்பான

dd

வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!

November 18, 2025

வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர்

1000922193

வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!

November 18, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி

dan

தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்

November 18, 2025

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார்.

kan

3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”

November 18, 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்