சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு இடையே, அதிமுக தனது புதிய எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளது. தவெக-விற்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக-வின் வெளி ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 இடங்களை வென்றுள்ள தவெக-விற்கு, காங்கிரஸின் 5 இடங்களையும் சேர்த்து 112 பலம் உள்ளது (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால்). இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்ட இன்னும் 6 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் இன்னும் விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை. இதற்கிடையே, அதிமுக-வின் 47 எம்.எல்.ஏ-க்களில் பாதிக்கும் மேற்பட்டோரை இழுக்க தவெக தரப்பில் ஒரு மூத்த நிர்வாகி ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இந்த ‘குதிரை பேர’ முயற்சியை முறியடிக்கவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவசர அவசரமாகப் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திமுக இந்த முறை எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு, அதிமுக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தரும் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் அடுத்தகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.
#ADMK #ResortPolitics #Puducherry #Vijay #TVK #BreakingNews #May7 #TamilNaduPolitics #EPS #Stalin #MajorityTest #PoliticalTwist #ThalapathyVijay #VijayAsCM #DMKSupport #ElectionResults2026 #NewGovernmentTN #HorseTradingAlert #PoliticalStrategy #VijayMakkalIyakkam_