டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளில் இந்த ஆண்டில் மிகப்பெரிய பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தப் பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனி குவியக்கூடும் என்பதால் ‘மஞ்சள் நிற’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலைகளில் பார்வைத் திறன் (Visibility) மிகக் குறைவாக இருக்கும் என்றும், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோ மக்கள் தகுந்த குளிர்கால உடைகளை அணியுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.