ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மீண்டும் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசியுள்ளேன் எனவும் இரு தரப்பு உறவு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதலை நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான மோதல் 14 ஆவது நாளாக நீடித்து வருகிறது.

இந்தத் தொடர் மோதல் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதன் காரணமாகவும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வருகின்றமையை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் பேசி வருகிறார்.

இது தொடர்பாக டில்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்,

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் சமீப நாட்களில் மூன்று முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.

கடைசியாக நடந்த உரையாடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கு மேல் தற்போது நான் ஏதேனும் கூறினால், அது பொருத்தமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ஈரானில் தற்போது சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பலர், ஈரானை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். தெஹ்ரான் நகரில் இருந்த சில இந்தியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பாதுகாப்பான பிற நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து அஜர்பைஜான், அர்மீனியா வழியாக வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு விசா மற்றும் நில எல்லையை கடப்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மீணடும் தொலைபேசியில் பேசினேன். இரு தரப்பு உறவுகள் குறித்தும் பிரிக்ஸ் தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.

55

கனடா அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை

ano

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மத்திய கிழக்குச் சூழ்நிலை மாறியுள்ளது!

March 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அனைத்து தரப்பினரும் பதற்றத்தை

mett

தொழில்நுட்ப மாற்றங்களால் மெட்டாவில் 20 வீத ஊழியர்கள் வேலை இழக்க வாய்ப்பு?

March 14, 2026

சமீபத்தில் வெளிவரும் தகவல்களுக்கு ஏற்ப, உலகப் பிரபல சமூக ஊடக நிறுவனமான Meta தனது மொத்தப் பணியாளர்களில் சுமார் 20

nor

வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

March 14, 2026

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய

med

“தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவினை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரிடம் கையளிப்பு

March 14, 2026

நீண்டகால மற்றும் விரிவான ஆலோசனைச் செயல்முறையின் பின்னர் தயாரிக்கப்பட்ட “இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கையின்” மேம்படுத்தப்பட்ட வரைவானது, (Advanced Draft)

f

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான சுற்று நிரூபத்தில் விரைவில் மாற்றம்

March 14, 2026

தித்வா புயலால் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அது குறித்த சுற்று

vimal

நாட்டில் பல தீவிர பிரச்சினைகள் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் ரகத்தை ஆராய்கிறார் – விமல் வீரவன்ச கிண்டல்

March 14, 2026

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. நாட்டில் பல தீவிர பிரச்சினைகள்

arres

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

March 14, 2026

கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) காலை

no

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு; விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

March 14, 2026

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும்

ic

லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி

March 14, 2026

இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்

ddd

பேராதனை பால நிர்மாணப் பணிகள்

March 14, 2026

பேராதனை ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) நிர்மாணப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் நிறைவு செய்ய முடியாது என புகையிரத நிலைய

ca

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகும் ஈரான்

March 14, 2026

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கருதப்படும் கார்க் (Kharg) தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.