சீன அரசாங்கம் வழங்கிய 1900 கடற்றொழில் வலைகளை மன்னாரில் பயன்படுத்தக் கோரிக்கை

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி நேரடியாக விஜயம் செய்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை அவசரமாக கூட்டி இருந்தார். வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.

இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு மிகவும் துன்பியலுக்கு உட்பட்டதாக அவர்களுடைய முறைப்பாடு இருந்தது.

இந்த கோரிக்கையை நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி இருந்தேன். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு கூட இருக்கிறது எனத் தெரியப்படுத்தி இருந்தேன். ஜனாதிபதி மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற கிட்டத்தட்ட 12000 மேற்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக இரண்டு வாரங்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவதாகவும் அதேபோல் வடக்கு மாகாண மீனவர்களுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்பட இருக்கின்றது.

அத்துடன் சேதமடைந்த படகுகளை திருத்துவதற்கும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களை திருத்துவதற்கும் உரிய நிதியினை விடுவிப்பதாக கூறப்பட்டது. அது மட்டுமல்லாமல் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 கடற்றொழில் வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதுக்கும் மேலாக பாடசாலை மாணவர்களுடைய தரவுகள் சேகரிப்பதில் சில மந்தநிலை காணப்பட்டது. அது தொடர்பாக ஜனாதிபதி கடுமையான உத்தரவை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

வருகின்ற 31 ஆம் திகதிக்குள் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தலா 15000 ரூபாய் ஆரம்ப கொடுப்பனவாக கொடுத்து அவர்களுடைய கற்றல் உபகரணங்கள், பாடசாலை பைகள், சப்பாத்துக்கள், சீருடை போன்றவற்றை உடனடியாக கொள்வனவு செய்வதற்கு வழங்குமாறு கூறியிருக்கின்றார். விசேடமாக பாதைகள் முழுமையாக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.

gam ambu

உயிரியல் பல்வகைமை வலய காணி அனுமதி ரத்து; விதிமுறைகளுக்கான தடை நீடிப்பு!

December 16, 2025

கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி

Cb rath

பண மோசடி தடுப்புச் சட்டம்; முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

December 16, 2025

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு

ananda wi

நாட்டில் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை?

December 16, 2025

மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு

siddarthan

தமிழக அரசியல் பிரமுகர்களை தமிழ் தேசியத் பேரவையினர் சந்திப்பது நல்ல விடயம் – சித்தார்த்தன்

December 16, 2025

தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை

s

சாரதி உறங்கியதால் அதிவேக வீதியில் விபத்து; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!

December 16, 2025

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்

photo-collage.png (19)

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

December 16, 2025

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான