சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் விபத்தில் பலி

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, உப்பூறல் பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்திலிருந்த மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

இந்த சம்பவத்தில் தோப்பூர் 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜௌசீர் அமான் (18 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த மாதம் நடைபெற்ற சாதாரண தர (O/L) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இளைஞனின் உடல் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, திடீர் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

chand

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

March 16, 2026

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும்,

Sajith

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் – சஜித் பிரேமதாச

March 16, 2026

எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Hormuz

ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஈரான் வெளியுறவு அமைச்சு

March 16, 2026

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின்

jee

பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை பதிவு செய்வதில் அதிக கவனம் தேவை

March 16, 2026

மலையக பெருந்தோட்ட பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான வயதெல்லையை பூர்த்திசெய்வர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யும் உறிய

Boat

இலங்கைக் கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட படகு!

March 16, 2026

இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான 123 கிலோ கிராம்

Accident Trinco

சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் விபத்தில் பலி

March 16, 2026

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்றையதினம்(15) மாலை இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர்

Kilinochchi

கிளிநொச்சியில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு!

March 16, 2026

கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயத்திணைக்களத்தின் மாவட்ட பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான 07 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட

Hansaha Vijemuni

எரிபொருளை வைத்தியர்களின் தேவைக்கேற்ப வழங்க நடவடிக்கை

March 16, 2026

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத்

hea

இலங்கையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

March 16, 2026

கண்டி, பல்லேகலே முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கையின் பெரிய அளவிலான இரண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களான ‘கெலும் லைஃப்

AAAA

ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் – ஐ.நா தூதர்

March 16, 2026

ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு வலுவான நிலையில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான

anu

வலுசக்தி விநியோகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

March 16, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர

h

பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் பாடசாலை விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர்

March 16, 2026

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர்