சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் – பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தில் விசேட நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆந் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல் கடந்த மாதம் 30ஆந் திகதி இடம்பெற்றது.

பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித குலத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் மொழி எனும் சிறப்பான ஆயுதம் பயன்படும் விதம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்ன, மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயரப்பின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த உலகமும் புரிந்து கொண்டுள்ள நிலையில் அதற்கான பெறுமதியை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 2017ஆண்டு தொடக்கம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தி அதற்கான சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட மொழிபெயர்ப்புத் துறையின் தொழில்வல்லுநர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய காரணங்கள் பல உள்ளன. இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் உரைபெயர்ப்பாளர்களின் வகிபாகமானது, வெறுமனே ஒரு தொழிலாக மாத்திரமன்றி அது இனங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற, மனிதர்களுக்கிடையிலான சந்தேகத்தைப் போக்குகின்ற தொழிலாக மாறியிருப்பது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.” எனக்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைப் பாராளுமன்றத்தின் உரைபெயர்ப்பாளர் அலுவலகத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களையும் சேவை இணைப்புச் செய்து, மொழிபெயர்ப்பு பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர உட்பட செயலாளர் குழாமும், சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயலத் பெரேராவும் வழங்கிவரும் ஒத்துழைப்பு போற்றுதலுக்குரியதாகும் என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயரப்பாளர் ஆறுமுகம் சரவணபவானந்தன் கருத்து தெரிவிக்கையில், இப்புவியில் வாழும் ஏனைய உயிரினங்களை விட மனிதகுலம் பலம் பொருந்திய இனமாக தன்னை கட்டியெழுப்புவதற்கு அவனாலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒப்பற்ற கருவியான மொழியைப் பற்றி மிக ஆழமாக விபரித்ததுடன், மொழிபெயர்ப்பு ஊடாக மனித குலம் நவீன உலகில் பெற்றுள்ள சிறப்பான வெற்றிகள் குறித்து சிலாகித்துப் பேசினார்.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகராஜா பிரதீப், உரைபெயர்ப்பாளர்களின் முன்னேற்றத்திற்கு தமது சங்கம் ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினரால் பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையின் வரைவு பிரதான பாராளுமன்ற உரைபெயர்ப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களின், மொழிபெயர்ப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான ஏ.ஜி.எம். பிக்ரி, கே.டீ. ரொஹான் பத்மசிரி மற்றும் மொழி பெயர்ப்பாளரான ஏ.எப். பயாஸ் மொஹமட் ஆகியோர் சிறப்பான கருத்துக்களை தெரிவித்ததுடன், தலைமை பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் என்.பீ.சீ.ஜே. நிஸ்ஸங்க நிகழ்ச்சியை மிகத் திறம்பட தொகுத்து வழங்கினார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி