சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிப்பது தனது அரசியல் இருப்புக்காகவே!

அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (10) அவரை தொடர்புகொண்டு வினவும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சட்டவிரோத கரைவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.

கடந்த வாரம் சட்டவிரோத கரைவலையை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச முறையற்ற சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டமையை வடபகுதியை மீனவர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை நடத்த வேண்டும் என வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த சஜித் பிரேமதாசவிடம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை தடை செய்ய வேண்டும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

ஆனால் சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் இடம் பெற்ற சட்டவிரோத மீன்பிடியை தடை செய்தமைக்கு ஆதரவாக கலந்து கொண்டமை அவரின் பங்கு ரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறையை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது போதாது கடலில் சட்டவிரோத அனைத்து மீன்பிடி முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மீனவர்களை எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது.

ஆகவே தனது அரசியல் இருப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்ட விரோத மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.