கடந்த 2022-ஆம் ஆண்டு ஃப்ரீடம் கான்வாய் (Freedom Convoy) போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு அவசரகாலச் சட்டத்தை &(Emergencies Act) பயன்படுத்தியது நியாயமற்றது என்று கனடா கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், கனடா சிவில் உரிமைக் கழகம் (CCLA) மற்றும் பிற அமைப்புகளுக்குப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது.
ஒட்டாவா மற்றும் எல்லைப் பகுதிகளில் நடந்த போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த போதிலும், அவை நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக (National Security Threat) அமையவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியது மற்றும் அவர்கள் ஒன்று கூடுவதைத் தடுத்தது ஆகிய நடவடிக்கைகள், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திர சாசனத்தின் (Charter of Rights) கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு நாட்டின் அவசரகாலச் சட்டம் என்பது மற்ற சாதாரண சட்டங்கள் தோல்வியடையும் போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கடைசி ஆயுதம் என்றும், இந்தப் போராட்டத்தில் அதைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசு தனது வாதத்தில், போராட்டக்காரர்கள் தலைநகரை முடக்கியதாகவும், பொருளாதாரத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தது.
ஆனால், பொருளாதாரப் பாதிப்புகளைக் காரணம் காட்டி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது என்று நீதிமன்றம் அந்த வாதத்தை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.