சட்டத்தரணி தம்பதியர் கொலைச் சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் கைது

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அம்பலங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவல்களின் படி, அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு (CCTV) காட்சிகளில் T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுக் கொண்டிருக்கும் நபர் இவரே என நம்பப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரு நபர்களும், அவர்களை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகன சாரதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆயுதங்களை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு வாகனம் கொட்டாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், குற்றத்திற்கு முன்னர் துப்பாக்கிதாரிகளை தங்கியிருந்த விடுதிக்கு கொண்டு சென்ற வாகனத்தை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் உரிமையாளர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவத்தில் ரிவால்வர் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், ரூக்ககஹவிலா, மீவல, பன்சல வீதியைச் சேர்ந்த ரொபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்ய விரிவான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 13 ஆம் திகதி, தலங்கம, அக்குரேகொடா பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், சட்டத்தரணி புத்திக்க மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டன.

ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிதாரிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சகோதரர்கள் பெப்ரவரி 16 ஆம் திகதி கொட்டாவ பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் “டிலா” என அழைக்கப்படும் மற்றொரு சந்தேகநபர் பொல்கசோவிற்ற பகுதியில் பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த இரு சகோதரர்களும் “டிலா” என அழைக்கப்படும் நபரின் உத்தரவின் பேரிலேயே ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய