கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி “Colours Night 2025”

கொழும்பு 04, புனித பேதுருவானவர் கல்லூரியின் (St. Peters college) விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ‘Colours Night 2025’ விழா 12 ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இளம் விளையாட்டு வீரர்களின் அபாரமான சாதனைகளை கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, பெருமை, ஊக்கம் மற்றும் பாராட்டுகளால் நிரம்பியதாக அமைந்தது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக TDM International Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தெமியா அன்தனி டி மெல் கலந்துகொண்டார். இவர் புனித பேதுருவானவர் கல்லூரி ரக்பி அறக்கட்டளையின் உப தலைவராகவும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (UK) முன்னாள் தலைவராகவும் விளங்குவதோடு, கல்லூரியின் விளையாட்டு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புகளை வழங்கிய பழைய மாணவராகவும் திகழ்கிறார்.

கல்லூரியின் அதிபர் அருட்தந்தை ரோஹித ரொட்ரிக்கோவின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், உப அதிபர் அருட்தந்தை இந்துநில் சம்பத் பெரேரா உள்ளிட்ட குருவானவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்களான அருட்தந்தை துசித சோலங்காரச்சி மற்றும் அருட்தந்தை பிரவீன் விஜேசேகர ஆகியோரின் வழிகாட்டுதலும் அர்ப்பணிப்பும் மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்தது.

நிகழ்வின் ஏற்பாடுகளில் விளையாட்டு செயலாளர் சுனந்த பெர்னாண்டோ மற்றும் உதவி விளையாட்டு செயலாளர் ஷெஹான் டயஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.

கடந்த 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளை உள்ளடக்கிய வகையில், இந்த ஆண்டு Colours Night வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. இதன்போது, 290 மாணவர்களுக்கு விருதுகளும் வரலாற்றுச் சாதனை விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், விளையாட்டு அறக்கட்டளைகள், ஆலோசனைக் குழுக்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டு புனித பேதுருவானவர் கல்லூரி குடும்பத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

Colours Night 2025 என்பது ஒரு விருது வழங்கும் விழா மட்டுமல்லாமல், “Virtus et Veritas” (வீரமும் உண்மையும்) என்ற கல்லூரியின் பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்திய, இளம் மாணவர்கள் எதிர்கால சந்ததிகளாக உருவாகும் பயணத்தை கொண்டாடிய ஒரு நாளாக அமைந்தது.

By C.G.Prashanthan

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்

December 13, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சாரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம

மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை

December 13, 2025

நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

December 13, 2025

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில்

mansa

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

December 13, 2025

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

wat

36 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு

December 13, 2025

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வு

December 13, 2025

பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

யாழ் சிறையின் நிவாரண உதவி

December 13, 2025

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி

December 13, 2025

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு

2025 ஆம் ஆண்டின் அரச வரி வருமானம் 4000 பில்லியன்

December 13, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குள் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,033 பில்லியன் ரூபாய் என நிதி

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது

December 13, 2025

சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விருந்து நிகழ்வில் பொலிஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் உட்பட

Parl

18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது

December 13, 2025

18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன

Arrest_1

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 13, 2025

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன்,