கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது?

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் நடைபெற்ற போராட்டம் பொய்யானது என தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் நேற்று(14.01.2026) அதே இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், லொப்கில் பகுதியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 பேருக்கு இருபத்தையாயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதியான 13 பேருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றதாக இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து கொட்டகலை பிரதேச சபையின் உபதலைவி யாகுலமேரி கருத்து தெரிவிக்கையில்,

இந்த வட்டாரத்தில் தேர்தல் வெற்றி பெற்றவர் என்ற வகையில் இந்த கருத்தை தெரிவிக்கிறேன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் புஸ்பா விஸ்வநாதன் அவர்கள் மக்களை திரட்டி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அது ஒரு பொய்யான போராட்டம், இங்குள்ள 24 பேருக்கு பணம் கிடைத்துள்ளது மிகுதியாக உள்ளவர்களுக்கு நாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கும்.

லொப்கில் இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரவுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் அவர் கிடைக்காத மக்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார்.

இதனை கேள்வியுற்றே அவர் இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்துள்ளார். அது மாத்திரமன்றி இன்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எந்த எதிர் கட்சி உறுப்பினரும் சென்று சிரமதான பணியிலோ அல்லது மக்களுக்கு உதவவோ இல்லை.

ஆனால் ஒரு சிலருக்கு மாத்திரம் அதுவும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் நிவாரணங்களை பெற்றுக்கொடுத்துவிட்டு அரசியல் இலாபம் தேடி வருகிறார்கள்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அவ்வாறான இழிவான அரசியல் செய்யும் கட்சி அல்ல, அது அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்திலே செயப்பட்டு வருகிறது என அதனை இன்று மக்கள் உணர்ந்துள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு மேல் அவர்களின் கட்சியின் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். எந்தவொரு மழையிலும் பாதிக்கப்படும் பிரதேசம் தான் லொப்கில் பிரதேசம் அப்போது அவர்கள் கடந்த அரசாங்கங்கள் இருக்கும் போது ஏன் இந்த மக்களுக்காக வேறு இடத்தில் வீடு கட்டி தரும்படி குரல் கொடுக்கவில்லை.

காணிகளை பெற்றுக்கொடுக்க சொல்லி போராட்டம் செய்யவில்லை, தற்போது ஆட்சியுள்ள அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்து வருகிறது. அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் கட்டாயம் பெற்றுக்கொடுப்பதே அவர்களின் நோக்கம்.

அத்துடன், தலவாக்கலை பிரதேச செயலகம் என்பது சுமார் லட்சக்கணக்கில் சன நெரிசலை கொண்ட ஒரு பிரதேச செயலகம். எனவே, சேவைகளை முன்னெடுக்கும் போது சில கால தாமதங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை