கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம் – சுஜித் சஞ்சய பெரேரா

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தேர்தல் நடத்தப்பட்டால் எமது ஒற்றுமையின் பலத்தை; பார்க்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணிலேயே நாம் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவோம். மாகாணசபைத் தேர்தலிலிருந்தே எமது ஒருமித்த பயணம் ஆரம்பமாகும்.

ஆனால் இந்த அரசாங்கம் திட்டமிட்டு மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியே பாரிய மோசடி எனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது 9 கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு மத்திய வங்கி பிணை முறி மோசடியை விட பன்மடங்கு மோசடி இடம்பெற்றிருக்கிறது. அமைச்சர்களும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை யார் ஈடுசெய்வது? ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்குமா? இந்த சுமை மக்கள் மீது தான் சுமத்தப்படும். அதற்கான முன்னேற்பாடாகவே 13 சதவீத மின் கட்டணத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து நாட்டு மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. தரக்குறைவான சேவைகளை மாத்திரமே இந்த அரசாங்கம் வழங்கிக் கொண்டிருக்கின்றதே தவிர, வேறு எவ்வித நிவாரணங்களையும் வழங்கவில்லை.

தாம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரு மாதங்களுக்குள் மோசடிக்காரர்கள் சிறையிலடைக்கப்படுவர் என ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மோசடிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததை தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் உண்மையான குற்றவாளிகள் பலர் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட போது இவர்கள் கூறிய விடயங்களை தற்போது மக்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இயலாமை தற்போது படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்