கியூபெக் மாகாண அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சர் சோனியா லெபெல் (Sonia LeBel) அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்பு, கியூபெக் அரசாங்கத்தின் துணை முதல்வர் ஜெனிவீவ் கில்போல்ட் தனது விலகலை அறிவித்திருந்தார்.
இப்போது சோனியா லெபெல்லும் விலகியிருப்பது ஆளும் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முடிவை அறிவித்த லெபெல், எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்தார்.
கியூபெக்கின் முதல்வர் பதவியிலிருந்து பிரான்சுவா லெகோல்ட் கடந்த வாரம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கியூபெக்கின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்குமாறு லெபெல்லுக்குக் கட்சியின் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பை சோனியா லெபெல் நிராகரித்துள்ளார். ஒரே வாரத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் என மூன்று முக்கியத் தூண்களை கட்சி இழந்துள்ளது. இது எதிர்வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.