களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில், கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளம் அரச கிராமிய கள அதிகாரிகளுக்குத் தலா 40,000 ரூபா பெறுமதியான 100 முழு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள், கமநல சேவை அதிகாரிகள் உள்ளிட்ட 100 கிராமிய மட்ட கள அதிகாரிகள் முதல் இரண்டு குழுக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அடிப்படை மட்டத்தில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் கற்கைநெறி மூலம், ஜனநாயக ஆட்சி, நல்லாட்சி மற்றும் சிவில் பங்குபற்றல் குறித்து ஆழமான அறிவையும் நடைமுறைப் பயிற்சியையும் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி தீகா தமயந்தி இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியபோது, இலங்கையில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அரச ஊழியர்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும் இது என வலியுறுத்தினார்.

கற்கைநெறிக்கான நிதி அனுசரணையை வழங்கும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் கிராமிய அரச சேவையில் ஜனநாயக விழுமியங்கள், புரிதல் மற்றும் அர்ப்பணிப்புக்காக முதலீடு செய்யக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த முழு புலமைப்பரிசில் திட்டம் நாட்டின் கிராமிய அபிவிருத்திக்கு பெரும் பலமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மேலும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்தக் கற்கைநெறிக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இக் கற்கைநெறியின் எதிர்கால டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகளை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி மற்றும் பதில் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். குணதிலக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் விமுக்தி துஷாந்த, கற்கைநெறிக்காகத் தயாரிக்கப்பட்ட மேலதிக வாசிப்புப் புத்தகத் தொகுதியை அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் ஒசந்த தலபவிலவிடம் கையளித்தார்.

ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி பற்றிய அறிவுடன் ஆயுதம் ஏந்திய இந்தக் கள அதிகாரிகள், தமது சமூகங்களின் அபிவிருத்திக்கும் இலங்கையின் சிறந்த ஆட்சிக்கும் வலுவான பங்களிப்பை வழங்குவார்கள் என்று பல்கலைக்கழகமும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை