கட்சிக்குள் நாகங்களும்..விச யந்துக்களும் போன்ற நிலை..” சுமந்திரன், சி.வீ.கே தொடர்பில் போர்க்கொடி தூக்கினார் குலநாயகம்

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது என்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர்.குலநாயகம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தொடர்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
36 மாட்டின் வீதி,
யாழ்ப்பாணம்.
02.06.2026
இலங்கைத்தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும்
அன்புடையீர்,
யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர் தெரிவில் இடம்பெற்ற அடாவடித்தன செயற்பாடு
இலங்கைத்தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 31.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் கட்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கான கடிதத்தினை மாவட்ட கிளைச் செயலாளர் என்ற வகையில் நான் அனுப்பியிருந்தேன்.
மாவட்ட கிளைத் தலைவரான திரு. கனகசபாபதி அவர்கள் கூட்டத்திற்கு தான் வரமுடியாது உள்ளதாகவும், என்னைத் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுமிருந்தார். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் வயதையும் கருத்திற்கொண்டு மரியாதையின் நிமித்தமும் திரு. சிவஞானம் அவர்கள் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுக்கொண்டேன். தலைமை தாங்க சம்மதித்த அவர் கூட்டம் ஆரம்பமானதும் எழுந்து நின்று கூட்டத்தினை திரு. சுமந்திரன் நடத்துவார் என அறிவித்தார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும் கட்சி நலன் கருதி சமாளித்துக்கொண்டேன். தான் தலைமை தாங்காதுவிடின் என்னிடம்தான் கூறியிருக்க வேண்டும். நானே கூட்டத்தினை நடத்தி முடித்து இருப்பேன். பின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு. சுமந்திரன் அறிவித்து செயலாளர் தெரிவு இடம்பெற்றது.
தொடர்ந்து உடனேயே திரு சிவஞானத்தினை தானே பிரேரித்து அந்த இடத்திலிருந்து தான் தலைமை தாங்குவதால் மாற்றுப் பிரேரணைக்கு இடமில்லை என்றும் எவரும் ஆமோதிக்க கூட தேவையில்லை என தெரிவித்த போது சபையிலிருந்தவர்கள் அதனை ஆட்சேபித்தார்கள். நான் கடுமையாக எதிர்த்து மற்றவர்களின் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும் என வற்புறுத்தினேன்.
இது தொடர்பான கருத்துக்கள் தெரிவித்தவர்களை அடாத்தாக அமரச் செய்து அவர்களது கருத்துக்களை மறுத்து திரு. சிவஞானமே தலைவர் என அறிவித்தார். இதனை ஏற்காத நான் கட்சி நலன் கருதி அமைதியாக இருந்து விட்டேன். மற்றவர்களின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்காமலே திரு. சிவஞானம் அவர்களை தலைமை தாங்க அமர்த்தினார். இச் செயற்பாடு ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இலங்கைத்தமிழரசுக் கட்சியில் மட்டுமல்ல வேறெந்த அமைப்புகளிலும் கூட இம்மாதிரியான அடாவடிச் செயற்பாடுகள் இடம்பெற்றது இல்லை. இலங்கைத்தமிழரசுக் கட்சிக்கென்று ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும் உள்ளன. கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது.
“எனவே இம்மாதிரியான தெரிவுகள் குறித்து கட்சி தீவிர கவனம் செலுத்தி தகுந்த தீர்வைக் காணாது விட்டால் சுயநலத்தாலும் பதவி மோகம் என்பதற்கு அப்பால் பதவி வெறியாலும், காழ்புணர்வுகளாலும் அடாவடித்தனங்கள் சண்டித்தனங்களாலும் பிரதேச வாதங்களாலும் நொருக்குண்டு பலயீனம் அடைந்திருக்கும் எம் கட்சியின் இன்றைய நிலை மேலும் மோசம் அடையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன். வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபாம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலக்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இக் கடிதத்தினை எழுதுகிறேன். இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.
எதிர்காலத்தில் இப்படியான நடைமுறைகளை வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது. இவ்விடயம் முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு கட்சி சின்னாபின்னமாக்க இடமளிக்கக் கூடாது என்பதற்காக இக் கடிதத்தினை எழுதுகிறேன். இக் கடிதத்தை ஏற்று மாவட்ட தலைவர் தெரிவு பற்றிய மத்திய செயற்குழு ஏற்று நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கிறேன். மேற்படி செயற்பாடு குறித்து எனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்