கடற்றொழில் குடும்பங்களின் வாழ்வாதாரம் குறித்து கோரிக்கை

திருகோணமலை வீரநகர் கரையோர பகுதியில் அதிக காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் காரணமாக கரையோர பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி தாழ் இறங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அப்பகுதி கரையோர கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கரையோரப் பகுதியில் ஏற்கனவே நான்கு வீடுகள் கடல் சீற்றம் காரணமாக தாழ் இறங்கி சேதமாக்கப்பட்ட நிலையில் ஒரு பகுதிக்கு மாத்திரம் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் இடும் நடவடிக்கை இடம் பெறுகிறது ஆனால் குறித்த கரையோரமானது 500 மீற்றருக்கும் மேலான தூரத்தை கொண்டுள்ளது.

இதனால் முழுமையாக கடல் அரிப்பை தடுத்து தங்களின் குடியிருப்புக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரிவித்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தற்போது வரைக்கும் எங்களுக்கு அரசாங்கம் ஊடாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் கடல் தொழிலுக்காக இன்னும் இரு மாத காவமாக செல்லவில்லை.

கடலை நம்பியே வாழ்கிறோம் எமது மனைவி பிள்ளைகளும் எங்களை நம்பியே உள்ளனர். நாங்கள் நகரப் பகுதி மையத்தில் உள்ளோம் எமது பகுதி ஊடான கடல் அரிப்பை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கவோ பார்க்கவோ இல்லை எமது வீடுகள் மற்றும் கோயில் எல்லாம் இந்த கடல் அரிப்பால் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எமது பிள்ளைகள் வெளியில் இறங்கி நடமாட முடியாதளவுக்கு கடலின் தாக்கம் சூழ்ந்துள்ளது மீண்டும் ஒரு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளோம். நாங்களும் இந்த நாட்டு பிரஜை என்ற வகையில் எமக்கு உதவி செய்ய யாரும் முன்வரவுமில்லை. எனவே தங்களையும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்