கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் மிகவிரைவில் கட்டுப்பாட்டிற்கு வரும் – அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி இன்று (13) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மனுவினை கையளித்துள்ளார்கள்.

இதன் பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கருத்துரைத்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழில் துறையில் மாவட்டத்தில் 20 வீதமான மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் 71 கிலோமீற்றருக்கு மேல் கடல்வளம் உள்ளது மாவட்டத்தில் உள்ள பிரச்சினை இந்த மீன்வளம் சட்டவிரோதமான முறையில் வளம் அழிக்கப்படுகின்றது.

இதில் முக்கியமாக இந்திய கடற்தொழிலாளர்களால் வந்து சட்டவிரோதமான முறையில் கடல்வளம் அள்ளிச்செல்லப்படுவது இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது.

அடுத்தது இலங்கையில் உள்ள கடற்தொழிலாளர்களும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் ஆழ்கடலில் சென்று சட்டவிரோத உபகரணங்களை பாவித்து கடற்தொழிலாளர்கள் கரைவலை மீன்பிடி தற்போதைய அராசாங்கத்தின் கொள்கை இந்த சட்டவிரோதமான செயல்கள் எல்லாத்தினையும் இயன்றவரைக்கும் கட்டுப்படுத்துவது மீன்பிடி துறையினை விட பெரிய பிரச்சினை போதைப்பொருள் ஓரளவிற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு ஊடாக கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அதேபோல் இவ்வாறு பல பிரச்சினை உள்ளது அதில் ஒன்று மீன்பிடி தொடர்பான பிரச்சினை கரைவலைக்கு உழவியந்திரம் பயன்படுத்துவது ஆறுமாதத்திற்கு முன்னர் தடைசெய்யப்பட்டது. அவர்கள் தவணைகேட்டது இப்போதுஅது நடைமுறைக்கு வந்துள்ளது சட்டத்திற்கு விரோதமான விடயத்தினால் பாதிக்கப்பட்டது என்பது பிழையான விடையம் முல்லைத்தீவில் உதாரணத்திற்கு காணியினை அதிகளவில் வைத்திருப்பவர்கள் இன்னும் கள்ளக்காணிகளை பிடித்துக்கொண்டு எதிராகவும் நிக்கின்றார்கள்.

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் செய்தோ பிரயோசனம் இல்லை அதனை அங்கிகரித்தால் சட்டவிரோதத்திற்கு அரசாங்கம் அங்கிகரித்த என வந்துவிடும் ஆனபடியால் கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் மிகவிரைவில் கட்டுப்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய இழுவைப்படகுகள் எதிர்காலத்தில் வருவதும் தடைப்படும் என நினைக்கின்றேன் அவ்வாறு வந்தால்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். வறுமையில் முதலாவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது கடற்தொழிலாளர்களின் பிரச்சினையினை உரிய இடத்திற்கு நாங்கள் அனுப்புவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய