ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை: 27வது கூட்டு ஆணையக் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் 2026, பெப்ரவரி 12, அன்று, கூட்டின.

நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டம், இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்து, ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி,மீன்வளம், கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மீளனுமதி மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரையிலான இருதரப்பு ஆர்வமுள்ள பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் மற்றும் இற்றைப்படுத்தல்களைப் பரிமாறிக் கொண்டது.

இக்கூட்டம், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்க இரு தரப்பினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் இரு தரப்பினரும் எடுத்த கொள்கைசார் சீர்திருத்தங்கள், நடைமுறை மேம்பாடுகள் மற்றும் சட்டரீதியான முயற்சிகள் குறித்த இற்றைப்படுத்தல்களை வலியுறுத்தியது.

2025, மே 5 அன்று நடைபெற்ற ஆளுகை, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஐரோப்பிய ஒன்றிய- இலங்கை செயற்குழு, 2025, நவம்பர் 13 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த செயற்குழு மற்றும் 2026, பெப்ரவரி 11 அன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்த செயற்குழு ஆகியவற்றின் பணிகளை கூட்டு ஆணையம் ஆய்வு செய்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டமை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (OSA) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து மற்றும் சங்க சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டு ஆணையத்தின் கலந்துடையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன தேசிய நிறுவனங்கள், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டு அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றால் ஆற்றப்படும் வலுப்படுத்தப்பட்ட வகிபாகம் குறித்தும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவித்தது.

சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதிலும் நீக்குவதிலும், மீன்வளத் துறையில் உள்ள உறுதிமொழிகளை மதிப்பதிலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், எராஸ்மஸ்+ மற்றும் ஹொரைசன் ஐரோப்பா கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஒத்துழைப்பு, அத்துடன் புலம்பெயர்வு மற்றும் மீளனுமதிக் கொள்கைகள் குறித்தும் பயானுறுதிமிக்க பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்தன.

அடுத்த கூட்டு ஆணையக் கூட்டத்தை 2027 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பம்பலோனி ஆகியோர் இணை தலைமை தாங்கினர்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு