எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என எமக்குத் தெரியாது. நாம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதை விடுத்து, வெளியில் அவற்றை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தம்மீது எவ்வித தவறும் இல்லை என்றால், எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இந்த விசாரணைகளை முடிந்தளவு துரிதமாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் தீர்மானித்திருக்கிறது. எனவே தான் தினந்தோரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மறுபுறம் வங்குரோத்தடைந்த எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் எவ்வித பாகுபாடும் இன்றி கட்சி பேதமின்றி அரசியலமைப்பின் 12 (01) உறுப்புரையை சரியாகப் பயன்படுத்தும் முறையான அரசாங்கமாக செயற்படுகின்றோம். இது ஜனாதிபதி தலைமைத்துவம் வகிக்கும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாகும். இந்நாட்களில் எமது கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் பாரியளவிலான பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், எனவே அவை சமூக மயப்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைச்சின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது.

அதற்கமைய மாதிரிக்காக மாத்திரம் சிறிய தொகையை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கை குறித்து அந்த குழு அவதானம் செலுத்தி வருகின்றது. அதேபோன்று ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்து வழக்கு தொடர முடியுமா என்ற பிரச்சினையும் காணப்பட்டது. எனவே தான் அது குறித்த சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்தும் வழக்கு தொடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Sathe

மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன்

March 13, 2026

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13)

c

பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வை வழங்குவார் – மின்சார தொழிற்சங்கங்கள்

March 13, 2026

தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள்

dammika ranathunga

ஊழல் குற்றச்சாட்டு; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும்

kan

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் – கனிமொழி

March 13, 2026

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன்

chand

கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

March 13, 2026

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு

For em

வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

March 13, 2026

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம்

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று

Harini-amarasooriya

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே!

March 13, 2026

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப்

44

கனடா பீல் பிராந்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு

March 13, 2026

பீல் பிராந்திய காவல்துறை ( Peel Regional Police) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தி,

sas

ஊழல் குற்றச்சாட்டு; சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணை நிறைவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க

savithri pol

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘அவள் வாழ்வின் உயிர்நாடி’

March 13, 2026

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா

nil

மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்பட்டது

March 13, 2026

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில்