கனடாவின் எடோபிகோக் (Etobicoke) பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தது குறித்து ரொரன்றோ பொலிஸார் (Toronto Police) விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹம்பர்வுட் கூட்டிணைவுப் பாதை (Humberwood Boulevard) மற்றும் ரெக்ஸ்டேல் கூட்டிணைவுப் பாதை (Rexdale Boulevard) ஆகிய பகுதிகள் சந்திக்கும் இடத்தில் காலை 7.00 மணிக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிக் காயங்களுடன் பெண் ஒருவர் இருப்பதைக் கண்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பொலிஸார் அவரது வயது குறித்த விவரங்களையோ அல்லது துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த காரணங்களையோ இதுவரை வெளியிடவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்பே சந்தேகநபர் தப்பிச் சென்றுவிட்டார் என்பதால், சந்தேகநபர் தொடர்பான எந்தவொரு அடையாள விவரிப்பும் வழங்கப்படவில்லை.
தற்போது இக்கொலை தொடர்பான விசாரணையை ரொரன்றோ பொலிஸின் கொலை விசாரணைப் பிரிவு (Homicide Unit) பொறுப்பேற்றுள்ளடன், இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் முன்வந்து தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது