ஊழல் என்பது ஒரு சாதாரண விடயம் என்ற நிலை இலங்கையில் மாற்றப்படவேண்டும்!

1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிக்கிறது என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் ரமேஸ் ராமசாமி தெரிவித்தார்.

நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கண்டி ஶ்ரீ புஸ்பதான மண்டபத்தில் நடத்திய சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத் அவர் இதனைத் தெரிவித்தார். நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நடத்தி வரும் கூட்டத் தொடரில் 251 வது கூட்டம் கண்டியில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024ம் ஆண்டு சர்வதேச ஆய்வுகள் இரண்டில் இலங்கை பற்றிய விடயங்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று சுவீடனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பு வெளியிட்ட தகவலாகும்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஜனநாயம் வளர்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 108 நாடுகளில் இலங்கைக்கு 58 வது இடத்தை வழங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக இறுதியாக நடந்த தேர்தல்கள் நியாயமாக நடந்துள்ளதாகவும் அதற்கு முன்னர் அந்த அளவு நம்பகத்தன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல் அமேரிக்காவின் “பிரீடம் ஹவுஸ்” என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சிகளில் ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் இடம் பெற்றதாகக் காட்டிக் கொண்டாலும் முற்று முழுதாக அவ்வாறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சர்வதேச ஆய்வுகள் இலங்கை பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்ட போதும் அதில் ஒரு உண்மையை வெளிக்காட்டியுள்ளது. அதாவது 1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் சாதாரண ஒரு விடயமாகவும், ஒரு கலாச்சாரமாகவும் மாறியுள்ளதமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

இருப்பினும் தற்போதைய அரசு ஊழல் ஒழிப்பு விடயத்தில் ஈடுபட்டுள்ளதை வரவேற்கமுடியும். இருப்பினும் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வில்லை எனலாம்.

அதே போல் தனி நபர் சார்ந்த மனித உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் காணப்பட்டாலும், ஒரு பரந்த குழு சார்பான மனித உரிமைகள் பற்றிய விடயம் குறைவாகவே உள்ளன. உதாரணமாக உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக பாலினம் சார்ந்த கோட்டாக்கள் (பெண்களுக்கான ஒதுக்கீடு) இருந்த போதும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றி ஏதும் இல்லை.

நாம் இலங்கையர் என்ற கருத்தை வளர்க்க பல்வேறு முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் இனத்துவ அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் திட்டங்கள் குறைவாக உள்ளன. நாட்டின் பல்வகைமையை மதிக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் தேவை.

எனவே நீதிக்கான ஒரு சமூகத்தை கட்டி எழுப்பும்போது இவ்விடயங்களும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இங்கு உரையாற்றிய பேராசிரியர் ரொகான் சமரஜீவ தெரிவித்தாவது,

இலங்கையில் பின்பற்ற முயற்சிக்கப்பட்ட குடும்ப ஆட்சி என்ற விடயத்தை வண. மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ 2012ல் மாற்றி அமைக்க பங்களிப்பு செய்தது. அதே போல் 40 வருடங்களுக்கு முன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது சுமார் 6 மாத காலத்திற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. புலிகளை அடக்குவதற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. ஆனால் 40 வருடமாகியும் அது இன்னும் அமுலில் உள்ளது.சிறிய விடயங்களுக்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இவை மாற்றப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் விரும்பும் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்த ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ முயற்சி எடுக்கும் என்றார்.

பேராதனைப்பர்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா, பேராசிரியர் சுனில் ஜயசேக்கர, கலாநிதி ஆரியரத்தன ஹேரத் உற்பட பலர் உரையாற்றினர்.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்