உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏனைய பயிர்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கமென்ற வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் அனைத்து விவசாயிகளையும் பாதுகாப்பதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நுகர்வோருக்கு கொள்வனவு செய்யக் கூடிய விலைக்கு வெங்காயத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் அவசியம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது. துல்லியமான தரவுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெளிவுபடுத்தினார்.

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து இதன் போது பரவலாக ஆராயப்பட்டது. உள்ளூர் பெரிய வெங்காய பயிற்செய்கை தொடர்பான நிலையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விவாசாயத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த பெரிய வெங்காய உற்பத்தியை 2026 ஆம் ஆண்டில் 22% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 27% ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்ட செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் பெரிய வெங்காயத்திற்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, களஞ்சியம் உட்பட விவசாயிகளின் வசதிகளை விரிவுபடுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

அதிக இடைவெளியுடன் கூடிய விலை ஏற்ற இறக்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினை என்றும், அந்த ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலே தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர். மேலும், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறையான பெரிய வெங்காய பயிற்செய்கையில் தொடர்ந்து ஈடுபட தேவையான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சிறிய காணிகளில் பயிரிடுவதால், உற்பத்திச் செலவைக் கணக்கிடுவது போன்ற முடிவுகளை எடுக்கும்போது இந்தக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த இங்கு விளக்கினார். அவசர நிலைமைகளில் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளிடமும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் முதன்முறையாக தலையிட்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.

விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமாராச்சி மற்றும் விவசாயத் திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகள், தம்புள்ளை மற்றும் கலென்பிந்துனுவெவவைச் சேர்ந்த பெரிய வெங்காய விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி