உலகம் தழுவிய ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – சட்டத்தரணி ஜோதிலிங்கம்

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையை என்பது சாராம்சத்தில் உள்நாட்டு பிரச்சினை அல்ல. இதுவொரு சர்வதேச பிரச்சினை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று(31.01.2026) மாலை யாழில் நடைபெற்ற “நீதிக்கான சாட்சி” என்ற நூதன முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிக்கான சாட்சி உரைக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,அரசியல் கைதிகளின் போல சொந்த நலனுக்காக சிறைகளுக்குள் சென்றவர்கள் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலேயே அவர்கள் இவ்வாறு சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் அரசியல் கைதிகள் என்பதை இந்த அரசை நாங்கள் முதலில் ஏற்க செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரம் அல்ல இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் கைதிகள் என்று ஏற்காத நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கூட ஒரு தடவை அரசியல் கைதி என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது தமிழ் மக்களின் பொது விவகாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அதனை தமிழ் மக்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் இதனை பொறுப்பெடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை பேசுவதையே அதிகமாக நிறுத்திக் கொண்ட நிலை தான் காணப்படுகின்றது.

அவர்கள் நினைத்திருந்தால் வலிமையாக செயல்பட்டு இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த முயற்சியை ஒரு வலுவானதாக செய்யவில்லை.

ஆகவே, அதற்காக நாங்கள் ஒரு அழுத்தத்தினை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசானது அச்சப்படுகின்ற ஒரே ஒரு விடயம் தமிழ் மக்களுடைய உலகளாவிய ரீதியிலான அரசியல் போராட்டம் தான்.

இதற்கு உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டமே. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபோது தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டம் வளர்ந்தது. தமிழ்நாட்டில் இவ்வாறு வளர்ந்த போது புலம்பெயர் நாடுகளில் அந்த போராட்டம் வளர்ந்தது.

அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து கொண்டிருந்த ஒரு காலம். இதன்போது உடனடியாகவே இந்திய தூதுவர் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள் என கூறியிருந்தார். ஏனென்றால் இது எங்களுக்கு பிரச்சினை என இந்திய தூதவர் கூறியிருந்தார்.

ஆகவே தமிழ் மக்களுடைய உலகளாவிய அரசியல் போராட்டத்திற்கு அரசு பயப்படுகின்றது.

காணிப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது இன்று நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளாக இருக்கலாம், அரசியல் கைதிகளின் விடயமாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயமாக இருக்கலாம் அனைத்துப் பிரச்சினைகளையும் உலகம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் உலகம் தழுவிய ரீதியில் நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால் முதலில் தாயகத்தில் ஒரு கொதிநிலை வேண்டும். தாயகத்தில் கொதிநிலை உண்டானால் தான் தமிழகத்தில் கொதிநிலை உண்டாகும்.

தமிழகத்தில் கொதிநிலை உண்டானால் தான் உலகம் தழுவிய ரீதியில் கொதிநிலை உண்டாகும். ஆகவே தாயகத்தில் ஒரு கொதிநிலையை எவ்வாறு நாங்கள் உண்டாக்குவது என்பதுதான் இங்கு விடயமாக காணப்படுகின்றது. இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி இல்லை. இருப்பதெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு தான்.

அரசியல் கட்சி என்றாலே நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்க்கின்றோம். இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி இல்லாத மக்கள் கூட்டமாக தான் நாங்கள் இருக்கின்றோம்.

இன்று எமக்கு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் உலகளாவிய ரீதியில் கையாளுகின்ற ஒரு அரசியல் இயக்கமே தேவைப்படுகின்றது.

அந்த அரசியல் இயக்கத்தை இன்று கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவையும் முக்கியத்துவமும் இன்று இருக்கின்றது என வலியுறுத்தியுள்ளார்.

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்

paw

திருடப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் அடகு கடைகளிலிருந்து மீட்பு!

August 26, 2026

யாழில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு

hi

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

August 26, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது

Nirmala-Sitharaman-Ali-Sabry

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவி கிடைக்க இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய முக்கிய பங்கு: அலி சப்ரி வெளிப்படுத்திய தகவல்

August 26, 2026

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இந்திய நிதியமைச்சர்

nanda

இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நெருங்குகிறது: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

August 26, 2026

2022-ஆம் ஆண்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரம் வேகமான மீட்சியடைந்து மீண்டும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்