தனுஷ் -மாரி செல்வராஜ் கூட்டணியில் அடுத்ததாக ஒரு திரைப்படம் தயாராகவுள்ளது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகப்போவதாக தகவல்கள் வர தற்போது இப்படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்.
தனுஷ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவரின் ஒவ்வொரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சம்பாதித்து வரும் படங்களாக உள்ளது. குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போகும் படம் தற்போதே எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கின்றது. கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இக்கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தனுஷின் 56 ஆவது படமாக தயாராகப்போகும் இப்படத்தின் கதை உருவாக்கத்தின் பணியில் மாரி செல்வராஜ் தற்போது ஈடுபட்டு வருகிறாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உலகத்தரத்தில் இப்படம் தயாராகவுள்ளதாம். மேலும் வரலாற்று படமாகவும் இப்படம் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.