“உரிமைகள், நீதி, செயல்” எனும் தொனிப்பொருளில் 2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தேசிய விழாவை இம்முறை மாத்தறையில் நடத்துவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டிற்கான உலகளாவிய கருப்பொருளாக “உரிமைகள், நீதி, செயல், அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக” என்பதை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த சர்வதேச கருப்பொருளுக்கமைய இலங்கையின் தேசிய மட்டத்திலான பிரதான கொண்டாட்டங்களை மாத்தறை ருகுணு பல்கலைக்கழகத்தின் இரவீந்திரநாத் தாகூர் மண்டபம் மற்றும் மாத்தறை கடற்கரைப் பூங்கா ஆகிய இடங்களில் நடத்துவதற்குப் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

பெண்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதே இந்த வருட தேசிய விழாவின் பிரதான நோக்கமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்முறை தேசிய விழாவை கொழும்புக்கு வெளியே நடத்துவதன் ஊடாக கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை கிராமிய மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சமூகத்திற்கு முன்மாதிரியான பங்களிப்பை வழங்கிய பெண்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. இந்த தேசிய விழாவிற்கான இலங்கைக்கே உரித்தான தேசிய கருப்பொருள், உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் முழுமையான நிகழ்ச்சி நிரல் தொடர்பான விபரங்கள் அமைச்சு மட்டத்தினால் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.