இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான திட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலிலிருந்து விலகியிருந்த கடந்த ஓராண்டு காலத்தில், அடுத்து என்ன செய்வது என்று ஆழமாக சிந்தித்தோம். ஐக்கிய தேசிய கட்சி என்பது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முன்வந்து, அவற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பாக மீட்டிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடுக்கு செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்துவிட்டார். எஞ்சியவற்றை முன்னெடுப்பதற்கு நாம் ஆயத்தமாகியுள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய வேவைத்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அரசாங்கத்தின் மீது குறை கூறிக் கொண்டிருக்கும் அரசியலை நாம் முன்னெடுக்கப் போவதில்லை.

அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அந்த இலக்கை நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் எம்மைப் போன்ற உறுப்பினர்களுடன் ஆதரவாளர்களும் இணைந்து தான் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. அந்த ஆதரவாளர்கள் இன்று இவ்விரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர்.

தலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தாலும், கட்சி ஆதரவாளர்களின் நிலைப்பாடு இரு கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதேயாகும். மாறாக இரு கட்சிகளும் இணையாவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், ஐ.தே.க.வில் இணைவதை தடுக்க முடியாது.

அத்தோடு மக்களுக்காக பொறுப்புள்ள ஒரு பொது எதிரணியை உருவாக்குவதற்கும் முயற்சிக்கின்றோம். அனைத்து கட்சிகளும் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளன.

நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் பொது எதிரணியாக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். நாட்டுக்காக எதனையும் செய்யாத, செய்வதற்கு இடமளிக்காத குழுவினரே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த மக்கள் நலன் திட்டங்களுக்கு பெயரை மாற்றி, புதிய திட்டங்களாக இவர்கள் முன்னெடுக்கின்றனர். அதனை தவிர இவர்களுக்கு தனித்து சுயமாக ஆட்சியை முன்னெடுக்கும் திறன் இல்லை.

எனவே அடுத்து ஆட்சியைப் பொறுப்பேற்கக் கூடிய புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

6 மாதங்களுக்குள் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். ‘ரணிலுடன் கற்போம்’ வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

இளைஞர்களை ஒருங்கிணைத்து 2 மணித்தியால செயற்றிட்டமாக இது முன்னெடுக்கப்படும். இரு வாரங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் திகதி இலங்கையில் முற்றுமுழுதான டிஜிட்டல் கட்சியான ஐ.தே.க.வை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவார்.

இவற்றுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி