தாய்லாந்தில் நடைபெற்ற 7-வது உலக முய் தாய் சாம்பியன்ஷிப் (Muay Thai World Championship) போட்டியில் பங்கேற்று, 2 சாம்பியன் பட்டங்களையும் (Belts) 3 தங்கப் பதக்கங்களையும் வென்ற இலங்கை வீரர்கள் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
தாய்லாந்து முய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிகள், கடந்த மார்ச் 12 முதல் 16-ஆம் திகதி வரை பட்டாயா (Pattaya) நகரில் நடைபெற்றன. இதில் உலகின் 30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்கினர்.