இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

 

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி கிரிக்கெட் ஆர்வத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தினர்.

அவர்கள் குறைபார்வை உடையவர்களாக இருந்தபோதிலும் விளையாட்டில் ஆழமான பற்றுடன்கூடிய பண்பான பார்வை இருப்பதை எடுத்துக் காட்டினர்.

பார்வையற்ற இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டி நடுநிலையான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக நிலைய மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், வரவேற்பு நாடான இலங்கை ஆறு நாடுகள் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுகின்றன. போட்டிகள் யாவும் இலங்கையில் நடைபெற்றுவருகின்றன.

இந்திய – பாகிஸ்தான் போட்டி முடிவில் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அரசியல் பதட்டங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு கைலாகு கொடுத்து தங்களது அதிசிறந்த விளையாட்டுப் பண்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையில் கொடிய இராணுவ மோதல் இடம்பெற்ற பின்னர் கிரிக்கெட் மைதானத்திற்கு வேளியேயும் களத்திலும் பதற்றம் அதிகமாக இருந்துவருகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இறுதிப் போட்டி உட்பட மூன்று தடவைகள் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றையொன்று எதிர்த்தாடிய போதிலும் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இரண்டு அணியினரும் கைகுலுக்கல்களைத் தவிர்த்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போதும் தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் போட்டியின்போதும் இரண்டு அணியினரும் வாழ்த்துக்களைப் பரிமாறாததுடன் கைகுலுக்கவும் இல்லை.

இந் நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நடைபெற்றபோது கைகுலுக்கல் இடம் பெறாததால் இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் போட்டி முடிவில் பார்வை உடைய தங்களது வீர, வீராங்கனைகளின் நடத்தையைப் பிரதிபலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டி முடிவில் பார்வையற்ற இரண்டு அணிகளினதும் வீராங்கனைகள் அன்பை பரிமாறிக்கொண்டதுடன் கைகளை குலுக்கி பாராட்டுதல்களையும் பகிர்ந்து சிறந்த குணாம்சங்களை வெளிப்படுத்தினர்.

கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற பார்வையற்ற மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு இந்தியா 10.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து பார்வையற்ற பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி நிம்ரா ரஃபீக் இந்தியாவின் பெரிய வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், அதே நேரத்தில் பார்வையற்ற இந்திய மகளிர் அணித் தலைவி ரி.சி. தீபிகா, பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதாகக் கூறினார்.

பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகள் களம் இறங்கும்போது ஒவ்வொரு அணியிலும் முழுமையான பார்வையற்ற நான்கு வீராங்கனைகள் இடம்பெறுவர். மற்றைய ஏழு வீராங்கனைகள் குறைபார்வை உடையவர்களாவர்.

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை