இலங்கையின் உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பு – பிரதமர்

பல்கலைக்கழகங்களில் நிலவும் 3000க்கும் அதிகமான விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதுடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேநேரம் உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதுதொடர்பில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறோம் என கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (06) இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்னாக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோறாறியவர்கள் இம்முறை பல பாடங்களுக்கும் தோற்றிய மாணவர்கள் 2,81,810 பேர். இவர்களில் பல்கலைக்கழக பிரவேசத்துக்கான அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளவர்கள் 1, 76, 530 பேர் ஆவர்.

இவர்களில் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 937 பேர் ஆகும். 2025 – 2026 ஆண்டுக்காக இரண்டு புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 26 செப்டம்பர் முதல் வாரத்தில் மேற்படி பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

உயர்கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கை மட்டும் வரைவு ஒன்றை தயாரிப்பதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழு கடந்த ஆறு மாதங்களாக அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அது அதனை விட விரிவானது. தொழில் கல்வியிலும் உயர் கல்வி அவசியமாவதால் இவை அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலேயே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவானது தற்போது நடைமுறையில் உள்ள உயர்கல்வியில் எதிர்கொள்ள நேரும் சிக்கல்கள் தொடர்பிலேயே ஆராய்கின்றது. விரைவில் அந்த அறிக்கை பெற்றுக் கொள்ளப்படும்.

பொதுவான கல்வி மறு சீரமைப்பிற்கு இணைந்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அவர்கள் ஆராய்கின்றனர். அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் எதிர்காலத்தில் உயர்கல்வியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் திட்டங்களை மேற்கொள்வோம்.

ஏவ்வாறாயினும் மேற்படி குழுவின் அறிக்கை மற்றும் அதற்குப் பின்னரான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த சில வருடங்களாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கேள்விக்கு ஏற்ப பாடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய பல்கலைக்கழக பீடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அவற்றுக்குத் தேவையான வசதிகள், ஆளணிகள் தொடர்பான திட்டமிடல் இடம் பெறவில்லை.

எனினும் தற்போது சிறந்த முறையில் அவற்றை முன்னெடுக்கும் வகையில் ஆளணிகளை முகாமைத்துவம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை கற்பித்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மேலதிகமாக போதுமான ஆளணிகள் தேவைப்படுகின்றன.

இவை அனைத்தையும் ஆராய்ந்து கவனத்திற் கொண்டு நாம் மேற்படி குழுவின் மூலமே அதன் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கு இணங்கவே நாம் ஆளணிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

2022 ஆம் ஆண்டு முதல் வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலை காணப்படுவதால் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு பல்கலைக்கழகங்கள் கோரும் எண்ணிக்கையை கவனத்திற் கொண்டு விரிவுரையாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அந்த வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் கல்வி சாரா ஊழியர்கள் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவு-கஞ்சி நிகழ்வு மக்களினால் முன்னெடுக்கப்பட்டது .

May 14, 2026

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன

arrest

மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர்

Hemarathne

பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

May 14, 2026

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி

hu

பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

May 14, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்!

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்