உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (22) தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின் மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர். இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும், பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பெண்ணின் மரணம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (SP) ராகுல் பாட்டி தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தது, மேலும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.