இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி – சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது.

அதேவேளை இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்றும் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழையையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இம்மழை எதிர்வரும் 19.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

இந்த மழை நாளை புதன்கிழமை (17.12.2025) நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளை 17.12.2025 கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) வடக்கு, கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு சற்று பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்காக நிலவுவதாலும் இக்காற்றுச்சுழற்சி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்பதனாலும் இலங்கையின் தென் பகுதியை மையம் கொண்டு கீழ் வளிமண்டல தளம்பல் நிலை நிலவுவதாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் சற்றுக் கனமழை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

ஆகவே மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் (16.12.2025) எதிர்வரும் 19.12.2025 வரை கன மழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் அவதானமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.

வடக்கு, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன. வான் பாயும் நிலையிலும் உள்ளன. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கும் மழை இந்தக் குளங்களின் வான் பாயும் நீரின் அளவை அதிகரிக்க கூடும்.

அதேவேளை நாட்டின் பல இடங்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளதனால் மேலதிகமாக கிடைக்கும் 75 மி.மீ. மழை கூட சில தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை இலங்கையின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆழ்கடற் பகுதிகளுக்கு பலநாட் கலங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்கள் வேகமான காற்று மற்றும் அதிக உயரம் கொண்ட கடலலைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

rupe

இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கல்

December 16, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக

Deatg

நீர்வேலியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

December 16, 2025

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த

war

சிவப்பு எச்சரிக்கை நீக்கம்; மஞ்சள் எச்சரிக்கை நீடிப்பு

December 16, 2025

முன்னர் வழங்கப்பட்ட நிலை 3 (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டன, அதே நேரத்தில் அதிகாரிகள் தற்போதைய நில நிலை மற்றும்

mod

பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

December 16, 2025

தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார். தமிழகத்தில் ஜன., 15ல் பொங்கல் பண்டிகை

th

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை மீறுகின்றது!

December 16, 2025

‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு

kash

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

December 16, 2025

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள

sou

‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

December 16, 2025

ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது.

jana

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

December 16, 2025

. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற

as

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

December 16, 2025

தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

arun

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’

December 16, 2025

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’

kombu see

‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீடு

December 16, 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் மற்றும் எதிர் காலத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக ஜொலிக்க போகும்

ipll

ஐ.பி.எல் 2026 ஏலம்: 25.2 கோடிக்கு ஏலம் போன கிறீன்

December 16, 2025

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான கமரன் கிறீன் 25.2