இரு வௌிநாட்டவர்கள் சீன சிகரட்டுக்களுடன் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான பயணிகள் இருவரும், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலுள்ள, அறிவிப்பதற்கு ஏதுமற்ற பொருட்களைக் கொண்டு செல்வோர் பயன்படுத்தும் பசுமைப் பாதை ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன,

சீன நாட்டவர் ஒருவரால் சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சிகரெட்டுகள், கம்போடியா ஊடாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அங்கிருந்து மலேசிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பின்னர், இவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்காக குறித்த பங்களாதேஷ் பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 28,400 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 412 சிகரெட் பொதிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

nallu

சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பம்

April 24, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று

iran

இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

April 24, 2026

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas

Saji

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

April 24, 2026

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி

toursim-2000x1125

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி

April 24, 2026

மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான

fa

சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

April 24, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்

Arrest_1

தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது

April 24, 2026

டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3

gov

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த

nikka

வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

April 24, 2026

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம்

thadd

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

April 24, 2026

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இந்த

meta

8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக மெட்டா அறிவிப்பு

April 24, 2026

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம்

rus

ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு!

April 24, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் எஸ். ஜகார்யன் (H.E. Levan S. Dzhagaryan) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும்

nor

நோர்வேயில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை?

April 24, 2026

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக்