இராமர் பாலத்தை பார்வையிட படகுச் சேவை

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடற்கரை பூங்காவானது மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டு குறித்த இடம் மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரை காலமும் இருந்து வந்தது.

2015 ஆம் ஆண்டு குறித்த கடற்கரை பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதியாக கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பையும் தெரிவித்திருந்ததாக தெரிய வருகிறது.

இந்நிலையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் இராமர் பாலத்தை பார்க்க வரும் சந்தர்ப்பத்தில் படகு சேவை ஒன்றை முன்னெடுக்க மன்னார் பகுதியின் மக்கள் கோரிக்கை முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் குறித்த கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களின் கலந்துரையாடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு படகு சேவை மேற்கொள்ள முடிவுகள் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான அனுமதி பெறப்பட்டு படகு சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் படகு சேவை கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்க உள்ளது. குறித்த நடவடிக்கை தொடர்பாக மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (8) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்றதன் அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலா பயணிகள் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என தெரிவித்து இதர வருமானங்கள் மன்னார் பிரதேச சபை திட்டங்கள் வகுத்து செயல்படுத்தலாம் என்று அரச அதிபர் தனது உரையில் தெரிவித்தார்.

கலந்து கொண்ட தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் மற்றும் சில உறுப்பினர்கள் மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகக் குறைவானது என்றும் இன்னும் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி படகு சேவைக்கான நிதி வசூலிப்பை தமக்கு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் அவ்வாறு செயல்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகள்ல தெரிவித்தார்.

இதன்போது மன்னார் பிரதேச சபை தவிசாளர் குறித்த கருத்தை ஆதரித்தும். கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிலர் மன்னார் பிரதேச சபை நிதி தொடர்பில் அதிருப்தி குறித்து தற்போது இவ்வாறான கருத்தை தாம் அனுமதிக்க முடியாது, முன்பு இவ்வாறு தான் காற்றாலை திட்டத்திற்கும் பல ஆசை வார்த்தைகள் கூறி திட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அதனால் மக்கள் படும் துன்பங்கள் பல இவ்வாறான நிலையில் பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கருத்தை நாங்கள் முன்வைத்து பிறிதொரு நாளில் இக்கூட்டத்தை நடத்தி குறித்த தீர்மானத்தை முன்னெடுக்கலாம் என்பதன் அடிப்படையில் மன்னார் அரசாங்க அதிபர் மற்றொரு நாளில் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் என்று கூட்டத்தை நிறைவு செய்தார்.

mav

கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

November 18, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப்

Death-2

துப்பாக்கிச் சூட்டில்; படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு

November 18, 2025

மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை

v

வனவளத் திணைக்களம் பயிர் நிலங்களை சேதப்படுத்துகின்றது!

November 18, 2025

வவுனியா, கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியில் மக்களின் நெற்காணிகளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதுடன்,நெற்பயிரை சேதப்படுத்தி தேக்கு மரம் நாட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு

ar

புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி வந்த லொறி தடம்புரண்டு விபத்து

November 18, 2025

வற்றாப்பளை பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி அரிசி ஏற்றி பயணித்துக் கொண்டிருந்த லொறி வாகனம், ஜங்கன்குளம் பகுதியில் உள்ள வளைவில்

cha

பொதுநலவாய சதுரங்கப் போட்டி; இலங்கைக்கு 09 பதக்கங்கள்

November 18, 2025

மலேசியாவில் நடைபெற்ற பொதுநலவாய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி 09 பதக்கங்களை வென்றுள்ளது. அதற்கமைய, 03 தங்கப்

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை