இரண்டு நாள் பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் ; ஹரின் பெர்ணான்டோ

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான உறுதியான தகவல்களை அறிந்துகொள்ளவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயவும் அரசாங்கம் இரண்டு நாள்பாராளுமன்ற விவாதம் ஒன்றை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் இயற்கை அனர்த்த நிலை ஏற்பட்டு 18 நாட்கள் கடந்துள்ளபோதும் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பீட்டு தொகையை உறுதியாக தெரிவிப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்ட 25ஆயிரம் ரூபா தொகையே இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை வழங்குவதிலும் ஒருசில பகுதிகளில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. அதனால் 25ஆயிரம் ரூபா கிடைக்கப்பெறாத மக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையில் விரக்தியடைந்துள்ளனர்.

அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்த 5மில்லியன் கோடி ரூபாவை எவ்வாறு அரசாங்கம் வழங்கப்போகின்றது.? அத்துடன் இடம்பெற்ற அனர்த்தத்தினால் நாடுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பில் நிதி அடிப்படையில் அதன் மதிப்பீடு என்ன? இந்த விடயங்களை அறிந்துகொள்ளவும் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கத்துக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கவும் தெரியாத தகவல்களை அறிந்துகொள்ளவும் அரசாங்கம் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி, ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் இரண்டு நாள் விவாதம் ஒன்றுக்கு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

ஏனெனில் இம்பெற்ற அனர்த்தத்தில் மொத்தமாக எத்தனை வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன என்ற உண்மையான தகவல் யாருக்கும் தெரியாது. அதனால் ஊடகங்கள் அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் நாளுக்கு நாள் முரண்பட்ட எண்ணிக்கையை தெரிவித்து வருகின்றன.

உண்மையான தகவல் தெரியாமர் இருப்பதாலே இவ்வாறு மாறுபட்ட எண்ணிக்கைகள் தெரிவிக்கப்படுகின்றன. அதனால் பாராளுமன்றத்தை கூட்டி, அனர்த்தம் தொடர்பில் பூரண தெளிவொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்.

2003ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் 24ஆயிரம் வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. சுமார் 50ஆயிரம் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்தமுறை இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகும். என்றாலும் 6ஆயரம் வீடுகளே முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதனாலே பாராளுமன்றத்தை கூட்டி இதுதொடர்பில் விவாதிக்க வேண்டும் என தெரிவிக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, நத்தார் தாத்தா போன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் தொகையை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான வழியை அமைத்துக்கொண்டார். தற்போது வேறு கதைகளை தெரிவித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நட்டஈட்டு தொகையை வழங்குவது என அரசாங்கத்துக்கு தெரியாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் என்றார்.

rupe

இழப்பீடு வழங்கும் நடவடிக்கை 50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கல்

December 16, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக

Deatg

நீர்வேலியைச் சேர்ந்த குடும்பஸ்தர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

December 16, 2025

யாழ்ப்பாணத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த

war

சிவப்பு எச்சரிக்கை நீக்கம்; மஞ்சள் எச்சரிக்கை நீடிப்பு

December 16, 2025

முன்னர் வழங்கப்பட்ட நிலை 3 (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டன, அதே நேரத்தில் அதிகாரிகள் தற்போதைய நில நிலை மற்றும்

mod

பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

December 16, 2025

தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார். தமிழகத்தில் ஜன., 15ல் பொங்கல் பண்டிகை

th

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை மீறுகின்றது!

December 16, 2025

‘2021 தேர்தல் வாக்குறுதிப்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது’ என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு

kash

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

December 16, 2025

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள

sou

‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

December 16, 2025

ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது.

jana

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

December 16, 2025

. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற

as

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு

December 16, 2025

தமிழ் திரையுலகில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்

arun

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’

December 16, 2025

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் கதையின் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’

kombu see

‘கொம்பு சீவி’ படத்தின் இசை வெளியீடு

December 16, 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் மற்றும் எதிர் காலத்தில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நடிகராக ஜொலிக்க போகும்

ipll

ஐ.பி.எல் 2026 ஏலம்: 25.2 கோடிக்கு ஏலம் போன கிறீன்

December 16, 2025

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 ஏலமானது செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரரான கமரன் கிறீன் 25.2